districts

img

பயிர் காப்பீட்டுத் தொகையை பாரபட்சமின்றி அனைத்து விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும்

திருத்துறைப்பூண்டி, நவ.5- திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டி அருகே கச்சனம் கடைவீதியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மாபெரும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.  கூட்டுறவு சங்கங்களின் விவசாய கடனை உடனே வழங்க வேண்டும். விவ சாயிகளுக்கு தாமதப்படுத்தாமல் கடன்  வழங்க வேண்டும். மேட்டூர் அணை திறந்து சுமார் 80 நாள்களை கடந்து  கூட்டுறவு சங்கத்தில் இருந்து விவசாயி களுக்கு DAP, யூரியா உரங்களை தட்டுப்பாடின்றி வழங்கிட வேண்டும். அரசு அறிவித்த இடுபொருள்களை பார பட்சமின்றி அனைத்து விவசாயி களுக்கும் வழங்க வேண்டும். பயிர் காப்பீட்டு திட்டத்தின்கீழ் வழங்கும் இன்சூரன்ஸ் தொகையை பாரபட்சமின்றி அனைத்து கிராம விவ சாயிகளுக்கும் வழங்க வேண்டும். குறுவை இன்சூரன்ஸ் வழங்க வேண்டும்.  தனியார் விவசாய இடுபொருள் வழங்கும் ஏஜென்சிகள், உரம் வாங்கும் விவசாயிகளிடம் தேவையற்ற மருந்து களை வாங்கினால்தான் உரம் தரு வோம் என்கின்றனர். அதை தவிர்க்க சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சாலை மறியல் நடை பெற்றது.  நிகழ்வில் வி.ச. ஒன்றியத் தலைவர்  எஸ்.எஸ்.பாலகுரு தலைமை வகித் தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே. என்.முருகானந்தம், ஒன்றியச் செய லாளர் எஸ்.முத்துக்குமாரசாமி, மாவட்டக் குழு உறுப்பினர் வி.டி.கதிரே சன், விவசாயிகள் சங்க ஒன்றியச் செய லாளர் வி.நடராஜன், விவசாயத் தொழி லாளர் சங்க ஒன்றியச் செயலாளர் எம். முருகதாஸ் மற்றும் ஒன்றியக் குழு  உறுப்பினர்கள், கிளைச் செயலா ளர்கள், பொதுமக்கள் என நூற்றுக்கும்  மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  தகவலறிந்து வந்த துணை காவல்  கண்காணிப்பாளர் பாஸ்கரன், தாசில்தார் குருமூர்த்தி, காவல் ஆய்வா ளர் மாரிமுத்து, காவல் உதவி ஆய்வா ளர் புஷ்பநாதன், சரக துணை பதிவாளர்  பிரபா, கும்பகோணம் மத்திய கூட்டுறவு  வங்கி திருவாரூர் கள மேலாளர் செல்வ குமார், வேளாண்மை உதவி இயக்கு நர் செந்தில் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர். அதில், ஒரு வாரத்திற்குள் கோரிக் கைகளை நிறைவேற்றி தருவதாக எழுத்துப்பூர்வமாக போராட்ட குழு விற்கு எழுதிக் கொடுத்தனர். இதை யடுத்து போராட்ட குழுவினர் தற்காலிக மாக போராட்டத்தை ஒத்தி வைத்தனர்.