புதுக்கோட்டை, மார்ச் 30 - காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திக் ப.சிதம் பரத்தை ஆதரித்து சிவகங்கை தொகுதிக் குட்பட்ட ஆலங்குடி சட்டமன்றத் தொகுதி அளவிலான செயல்வீரர்கள் கூட்டம் வெள்ளிக் கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஒன்றியத்தின் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி பேசுகையில், சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளருக்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் திருமயம், ஆலங்குடி தொகு தியில் அதிக வாக்குகள் பெற்றுத் தரப்படும்” என்றார். சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் பேசுகையில், “வேட்பாளர் அனைத்து ஊர்களுக்கும் வர இயலாது என்பதால் வாக்காளர்களே வேட்பாளர் களாக மாறி களத்தில் செயல்பட வேண்டும். ஆலங்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள 80 ஊராட்சிகள் மற்றும் 2 பேரூராட்சி களிலும் இரு தினங்களுக்குள் செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்த வேண்டும். தேர்தலுக்குள் ஆலங்குடி தொகுதியில் உள்ள 75 ஆயிரம் குடும்பத்தினரிடமும் நேரில் சென்று தமிழக அரசு செய்த சாதனைகளையும், பாஜக வெற்றி பெறக் கூடாது என்பதற்கான காரணங் களையும் விளக்க வேண்டும்” என்றார். கூட்டத்தில், கந்தர்வக்கோட்டை சட்டப் பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை, வேட்பாளர் கார்த்திக் சிதம்பரம், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் இராம.சுப்பிரமணியன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.கவி வர்மன், சிபிஐ மாவட்டச் செயலாளர் த.செங் கோடன் உள்ளிட்டோர் பேசினர்.