மதுரை, மார்ச் 25- திமுக தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணி சார்பில் மதுரை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு. வெங்கடேசனுக்கு ஆதர வாக அரிவாள் சுத்தியல் நட் சத்திர சின்னத்தில் வாக்குச் சேகரிப்பது தொடர்பாக பரவை பேரூர் திமுக, திருப் பரங்குன்றம் வடக்கு ஒன் றிய திமுக மற்றும் இந்தியா கூட்டணி தேர்தல் பணி குழு சார்பில் செயல் வீரர்கள் கூட் டம் பரவையில் நடைபெற் றது. கூட்டத்திற்கு திமுக திருப்பரங்குன்றம் வடக்கு ஒன்றியச் செயலாளர் ஆர்.கே.ஜெயராமன் தலைமை வகித்தார். திமுக பரவை பேரூர் செயலாளர் ராஜா மணி வரவேற்றார். மதிமுக ஒன்றியச் செயலாளர் புக ழேந்தி, சிபிஐ ஒன்றியச் செய லாளர் ஆர்.எஸ்.கண்ணன், காங்கிரஸ் தலைவர் மாரி யப்பன், விசிக பேரூர் செய லாளர் மாரியப்பன், திமுக மாவட்ட அணி துணை அமைப்பாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் பேசினர். மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் பி. சுகந்தி நிறைவு செய்து பேசி னார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் வி.உமாமகேஸ் வரன் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் மாவட்டக் குழு உறுப்பினர் சி.மலர் விழி, திருப்பரங்குன்றம் தாலுகா செயலாளர் எம். ஜெயகுமார், மேற்கு ஒன்றி யக் குழு உறுப்பினர்கள் பி. நாகேந்திரன், கே.பாண்டி யன், எஸ்.சரஸ்வதி, கே. அமிர்தவள்ளி ஜாகிர் உசேன், கே.முருகேசன், பரவை மகாலிங்கம் மற்றும் கூட்டணி கட்சி, மாவட்ட பேரூர், ஒன்றிய நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.