districts

புத்தூர் கிராமத்தில் மேம்படுத்தப் பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் இலவச கண்  சிகிச்சை முகாம் நடைபெற்றது

பாபநாசம், ஜூலை 12-

     தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே கோவிந்த நாட்டுச்சேரி ஊராட்சி, புத்தூர் கிராமத்தில் மேம்படுத்தப் பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் இலவச கண்  சிகிச்சை முகாம் நடைபெற்றது. முகாமில் கண் மருத்துவ உதவியாளர் ரெங்கராஜன் 70 பேரிடம் கண் பரிசோதனை மேற்கொண்டார். இதில் கண்புரை முற்றிய நிலையில் இருந்த  20 பேர், கண்ணில் அறுவைச் சிகிச்சை மேற்கொள்வ தற்கான தஞ்சாவூர் மண்டல கண் ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஊராட்சித் தலைவர் ஜெய்சங்கர், துணைத் தலைவர் இந்திரா காந்தி, முன்னாள் துணைத் தலைவர் கணேசன், சுகாதார ஆய்வாளர் நாடிமுத்து உள்  ளிட்டோர் பங்கேற்றனர்.