தஞ்சாவூர், ஏப்.17- திராவிடர் கழகம் சார்பில், இந்தியா கூட்டணியின் திமுக வேட்பாளராக உதயசூரியன் சின்னத்தில் போட்டி யிடும் வேட்பாளர் ச.முரசொலிக்கு ஆதரவாக தேர்தல் பரப்புரை பொதுக் கூட்டம் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி காந்தி பூங்கா அருகில் செவ்வாய்க்கிழமை மாலை நடை பெற்றது. இக்கூட்டத்திற்கு, திராவிடர் கழகம் தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் மல்லிகை வை.சிதம்பரம் தலைமை வகித்தார். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி சிறப்புரையாற்றினார். பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார், திமுக ஒன்றியச் செயலாளர்கள், காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ ஆர்.சிங்காரம், திமுக நகரச் செயலாளர் என்.எஸ்.சேகர் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக செய்தியாளர்களிடம் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியதாவது: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும், திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி யின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இது உறுதி செய்யப்பட்ட வெற்றியாக உள்ளது. காரணம், கடந்த 10 ஆண்டு கால மோடியின் ஆட்சி, கடுமையான வெப்பச்சூழலை விட, கொடுமையான அரசியல் வெப் பத்தை தந்துள்ளது என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர். தமிழ்நாடு மட்டு மின்றி, தென் மாநிலங்கள், வடமாநி லங்கள், வடகிழக்கு மாநிலங்களிலும் மோடிக்கு எதிரான அலை வீசுகிறது. ஒன்றிய அரசின் உள்துறை அமைச் சகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. ஒன்றிய அளவில் இன்றைக்கு ஆட்சி மாற்றம் ஏற்படும் என்ற வலுவான செய்திகள் வந்து கொண்டிருக்கையில், தில்லியில் முக்கியமான இடத்தில், அதிக பாதுகாப்பில் உள்ள உள் துறை அமைச்சகத்தில் தீ விபத்து எப்படி ஏற்படும் என்பது மில்லியன் டாலர் கேள்வி. இந்த தீ விபத்தில் முக்கியமான ஆவணங்கள் எரிந்திருக்க கூடும் என்ற செய்திகளும் வந்துள்ளன. இதுகுறித்து சுதந்திரமான, தெளிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். சந்தேகம் எழுகிறது அண்டை நாடுகளின் பிரச்சனை, உள்நாடுகளின் பிரச்சனை என பல்வேறு முக்கிய பிரச்சனைகளை கையா ளக் கூடிய, உச்சபட்ச பாதுகாப்பு நிறைந்த, ஒன்றிய உள்துறை அமைச்ச கத்தில் தீ விபத்து என்பதும், முக்கிய மான காலகட்டத்தில் புதிய ஆட்சி அமைய சில மாதங்களே உள்ள நிலை யில், தீ விபத்து ஏற்பட்டிருப்பது சந்தே கத்தை எழுப்புகிறது. எழுந்துள்ளது. இந்தியா கூட்டணி சார்பில் யார் பிரதமர் என, தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் தான் முடிவெடுக்க முடியும். அதுதான் ஜனநாயகமும் கூட. பாஜக கூட்டணிக்கு மோடி தான் பிரதமர்; இந்தியா கூட்டணிக்கு யார் பிரதமர் என தமிழ்நாட்டிலேயே போணியாகாத ஒரு தலைவர் கேட்டுள்ளார். அதற்கு முதல்வர் ஸ்டாலின் தெளிவாக பதில் சொல்லி விட்டார். இந்திய ஜனநாய கம் தற்போது மரணப் படுக்கையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளது. ஜன நாயகத்தை பாதுகாக்க மக்கள் சக்தி யால்தான் முடியும். தமிழக மக்கள் மிகத் தெளிவாக உள்ளனர். இதுவரை தமிழகத்திற்கு 9 முறை வந்த பிரதமர் மோடி, தனது வாழ்நாளில் கடைந்தெடுத்த பொய்களை மட்டுமே சொல்லக்கூடிய மோடி, நெல்லையில் ஒரு உண்மை யைச் சொல்லியுள்ளார். அது, “தமிழ் நாட்டிற்கு தேர்தல் பயணமாக வருவது இதுதான் கடைசிப் பயணம்” என்று சொல்லி உள்ளார். இதன் பொருள், “அவர் வருவதும், அவரது கட்சி ஆட்சிக்கு வருவதும் இது தான் கடைசி” என்பது. ஜூன் 4 அன்று மோடி ஆட்சிக்கு இந்திய மக்கள் விடை கொடுக்கும் நாளாக அமையும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.