districts

கொரோனா காலத்தில் பணியாற்றிய தூய்மைப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை கோரி வழக்கு

மதுரை, ஏப்.30- கொரோனா காலத்தில் பணியாற்றிய தூய்மைப் பணியாளர்களுக்கு ஊக் கத்தொகை  வழங்கக் கோரி  உயர்நீதிமன்ற மதுரை கிளை யில் வழக்கு தொடுக்கப்பட் டுள்ளது. விருதுநகர் துப்புரவு அரசு பணியாளர்கள்  சங்கம் சார்பாக  அன்னமயில் என்ப வர் உயர்நீதிமன்ற மதுரைக்  கிளையில் மனுவினைத் தாக் கல் செய்திருந்தார்.  அதில்,  “கொரோனா நோய் தொற்று காலத்தில் துப்புரவு பணியாளர்கள், ஒப்  பந்த பணியாளர்கள், காவல்  துறையினர், மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோர் முன்கள பணியாளர்களாக பணி செய்து வந்தனர். 2021 மே 28 அன்று தமிழக அரசு  அரசாணையை பிறப்பித்  தது. அதில்  2021  கோவிட்  நோய் தொற்று உச்சநிலை யில் இருந்த காலத்தில் பணி யாற்றிய துப்புரவு பணியா ளர்களுக்கு 15 ஆயிரம் ரூபாயை ஊக்க தொகையாக வழங்  கப்படும் என அறிவித்தி ருந்தது. ஆனால் இன்றுவரை அதன் அடிப்படையில் யாருக்கும் ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை. இதனை வழங்கக் கோரி  அதிகாரிகளுக்கு பலமுறை  மனு அளித்தும் எந்த நட வடிக்கையும் எடுக்கப்பட வில்லை.  ஆகவே தமிழக அர சின் அரசாணை அடிப்படை யில், துப்புரவு பணியாளர்  களுக்கு 15 ஆயிரம் ரூபாயை ஊக்கத்தொகையாக வழங்க உத்தரவிட வேண் டும்” என கூறியிருந்தார். இந்த வழக்கை விசா ரித்த நீதிபதி மஞ்சுளா, கோவிட் தொற்று காலத்தில் பணியாற்றிய துப்புரவு பணி யாளர்கள் தங்களுக்கு வழங்க வேண்டிய ஊக் கத்தொகை வழங்க கோரி மீண்டும் தனித்தனியே தமி ழக சுகாதாரத்துறை முதன்  மைச் செயலரிடம் மனு வழங்க வேண்டும். அதனை அவர் பரிசீலித்து உரிய முடி வெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.