அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்கத்தின் நாகப்பட்டினம் நகரக் குழு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மெழுகுவத்தி ஏந்தி போராட்டம் நடைபெற்றது. நகரத் தலைவர் கே.எஸ்.நாதன், செயலாளர் ஜோதி, மாவட்ட குழு உறுப்பினர் ஏ.தவமணி, சிஐடியு மாவட்டக் குழு உறுப்பினர் சு.மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.