districts

img

திருவப்பூர் ஜல்லிக்கட்டில் 55 பேர் காயம்: தண்ணீருக்குள் மூழ்கிய காளை உயிரிழப்பு

புதுக்கோட்டை, பிப்.27-  திருவப்பூர் முத்துமாரி யம்மன் மாசிப் பெருந்திருவிழா வை யொட்டி கவிநாடு கண்மா யில் ஞாயிற்றுக்கிழமை நடை பெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகு பதி தொடங்கி வைத்தார்.  விழாவில் புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் வை. முத்துராஜா, வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கேகே.செல்  லப்பாண்டியன், மாவட்ட வரு வாய் அலுவலர் மா.செல்வி, மத்திய விலங்குகள் நலவாரி யத்தின் ஜல்லிக்கட்டு கண்கா ணிப்பு அலுவலர் எஸ்.கே.மிட் டல், ஆய்வுக் குழு உறுப்பினர் அயூப்கான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மொத்தம் 902 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. 150  மாடுபிடி வீரர்கள் களம் இறங்கி னர். 55 பேர் காயமடைந்தனர். இவர்களுக்கு அங்கேயே அமைக்கப்பட்டிருந்த மருத்துவ சிகிச்சை மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. 7 பேர் அரசு  மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். 4 காளைகளுக்கு சிறுகாயங்கள் ஏற்பட்டன.  கண்மாய்க்குள் இறங்கிய காளை பலி ஜல்லிக்கட்டு நடைபெற்ற கண்மாயின் ஒரு பகுதியில் தண்ணீர் இருந்தது. அவிழ்த்து விடப்பட்டவற்றில் 6 காளைகள் தண்ணீரில் இறங்கின. தீய ணைப்பு வீரர்கள் தண்ணீருக் குள் குதித்து அவற்றை மீட்டு வந்தனர். இதில், புதுக்கோட்டை மாவட்டம் வெட்டன்விடுதியைச் சேர்ந்த சந்திரன் என்பவரின் காளை நீரில் மூழ்கி இறந்து போனது. மற்ற 5 காளைகள் உயிருடன் மீட்கப்பட்டன.