சித்திரை திருநாளை முன்னிட்டு 16 அடி விஸ்வரூபம் வைராக்கிய ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் மன்னார்குடி, ஏப்.15- திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் புகழ்பெற்ற ஸ்ரீதேவி, பூதேவி சமேத அபிஷ்ட வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயிலில் 16 அடி விஸ்வரூபம் வைராக்கிய ஆஞ்சநேயர் தனி சன்னதியில் அருள் பாலிக்கிறார். சனிக்கிழமை மற்றும் அமாவாசை போன்ற தினங்களில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். ஞாயிறன்று (ஏப்.14) தமிழ் புத்தாண்டு சித்திரை திருநாளை முன்னிட்டு காலை முதலே சாமிக்கு அபிஷேக ஆராதனையும் தீபாரானையும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்கா ரம் செய்யப்பட்டு மகா தீப ஆராதனை காட்டப்பட்டது. இதில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை ஆலய தலைமை பட்டாச்சாரியார் வெங்கடேசன், கோயில் செயல் அலுவலர் சிங்கார வடிவேலு உள்ளிட்டோர் செய்திருந்தனர்.