மயிலாடுதுறை, ஜூலை 12 - மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியம், மாதானம் அருகேயுள்ள ஆலங் காடு ஊராட்சி, ஏகோஜி மகாராஜபுரம் கிராமத் தில் குடியிருக்க இடம் கேட்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் 7 ஆவது நாளான வெள்ளியன்றும் தொடர்ந்து போ ராட்டம் நடைபெற்றது. ஏகோஜிமகாராஜபுரம், மேலத்தெருவில் வசிக்கும் பட்டியலின மக்கள் சிறிய அளவி லான காலனி வீடுகளில் கடும் நெருக்கடி யான இடத்தில் வசித்து வருவதால், கடந்த பல ஆண்டுகளாக குடியிருக்க இடம் கேட்டு அரசு துறையிடம் கோரிக்கை விடுத்து வந்த னர். இதில் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை. இந்நிலையில், அதே பகுதியில் உள்ள 3.5 ஏக்கர் பரப்பளவிலான இடத்தை 45 குடும்பங்களுக்கு பிரித்து தர வேண்டு மென்ற கோரிக்கையை முன்வைத்து அந்த இடத்தில் குடிசை அமைத்து குடியேறும் போராட்டத்தை சனிக்கிழமை முதல் மார்க்சி ஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் பி.சீனி வாசன் தலைமையில் இரவு பகலாக தொ டர்ந்து நடத்தி வருகின்றனர். கட்சியின் மாவட்ட செயற்குழு, மாவட்டக் குழு உறுப்பினர்கள், ஒன்றியச் செயலா ளர்கள், ஒன்றியக் குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள், வாலிபர், மாதர் சங்க நிர்வாகிகள் உட்பட 300-க்கும் மேற்பட் டோர் 7 ஆவது நாளான வெள்ளியன்றும் தொ டர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.