திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலு வலக கூட்டரங்கில், முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சி யர் தி.சாருஸ்ரீ சனிக்கிழமை செய்தி யாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவிக்கை யில், திருவாரூர் மாவட்டத்தில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணிக்க பறக்கும் படை குழு, ஒரு சட்டமன்ற தொகுதிக்கு தலா 3 வீதம் 12 பறக்கும் படை குழுக்கள், மாவட்டம் முழுவதும் மொத்தம் 12 நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் நடத்தை விதிகள் மீறப்படு வது தொடர்பான புகார்களை திரு வாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் செயல்பட்டு வரும் கட்டுப் பாட்டு அறைக்கு 1950 மற்றும் 1800- 425-3578 என்ற இலவச அழைப்பு தொலைபேசி எண் மூலம் தெரிவிக்க லாம். திருவாரூர் மாவட்டத்தில் 72 பதற்ற மான வாக்குச்சாவடிகள் கண்டறியப் பட்டுள்ளன. பொதுமக்கள் 50 ஆயி ரம் ரூபாய் கையில் கொண்டு செல்ல லாம். அதற்குமேல் கொண்டு செல்லும் பணத்திற்கு கையில் உரிய ஆவணங்கள் வைத்துக் கொள்ள வேண்டும். வங்கிகளில் பணப் பரி மாற்றத்தை கண்காணிக்க வங்கி அதி காரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள் ளது. தேர்தல் நடத்தை விதிமுறை கள் அமலுக்கு வந்த 72 மணி நேரத் திற்குள் மாவட்டத்தில் வைக்கப்பட்டு உள்ள விளம்பர பதாகைகள், புகைப் படங்களை அகற்ற அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம், விவசாயி கள் குறைதீர் கூட்டம் போன்ற அரசு நிகழ்வுகள் நடைபெறாது என்றார்.