districts

திருச்சி முக்கிய செய்திகள்

பொற்பனை அகழாய்வுக்கு மேலும் 7 குழிகள் அமைப்பு

புதுக்கோட்டை, ஆக.30 - பொற்பனைக் கோட்டை அகழாய்வுப் பணிக்காக புதிதாக 7 குழிகள் அமைக்கும் பணியை தமிழகத் தொல்லியல் துறை மேற்கொண்டுள்ளது.  புதுக்கோட்டை நகரிலிருந்து 6 கி.மீ.  தொலைவிலுள்ள பொற்பனைக் கோட்டை யில் தமிழகத் தொல்லியல் துறை மூலம் அகழாய்வுப் பணிகள் கடந்த மே 20 அன்று தொடங்கின.  தொல்லியல் அலுவலர் த.தங்க துரையை இயக்குநராகக் கொண்டு நடை பெற்று வரும் இந்த அகழாய்வில், 3.11 ஏக்கர்  பரப்பளவு கொண்ட அரண்மனைத் திடல் என்ற பகுதியில் 14 குழிகளும், அகழியில் ஒரு  குழியும் என மொத்தம் 15 குழிகள் அமைக்கப் பட்டு அகழாய்வு செய்யும் பணிகள் நடை பெற்று வருகின்றன. இந்நிலையில், தற்போது புதிதாக கோட்டைக் கரை என்ற இடத்தில் கோட்டை யின் கட்டுமானத்தை அறியும் வகையில், 5 அடி அகலம் மற்றும் நீளத்தில் 7 குழிகள் அமைக்கும் பணிகள் புதன்கிழமை தொடங்கப் பட்டன. சுமார் 2.5 கி.மீ. சுற்றளவு கொண்ட கோட்டைச்சுவர் சில இடங்களில் உயரமாக வும், சில இடங்களில் உயரம் குறைந்தும்  காணப்படுகிறது. வடக்குப் பகுதி கோட்டைக்  கரை சுமார் 5 மீட்டர் உயரம் கொண்டதாக வும், ஒட்டுமொத்த கோட்டையின் உயரமான  மண் மேட்டுச் சுவராகவும் காணப்படுகிறது. இம்மண் மேட்டுச் சுவர் சுமார் ஒரு மீட்டர்  அகலத்தில் நீளமான செங்கல் கட்டடமாக தெரிகிறது. எனவே, இந்த இடத்தில் படிக்கட்டு போன்ற அமைப்பில் 7 குழிகள் அமைத்து அகழாய்வு செய்யும்போது கோட்டை அமைப்பு குறித்த தகவல்கள் கிடைக்கப் பெறும் எனக் கருதப்படுகிறது என  அகழாய்வு இயக்குநர் த.தங்கதுரை தெரி வித்தார்.

மாற்றுத் திறனாளிகள் சங்க  புதிய கிளை தொடக்கம்

கும்பகோணம், ஆக.30- தஞ்சாவூர் மாவட்டம், பாப நாசம் ஒன்றியம் கீழவழுத்தூர் கிரா மத்தில் அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போ ருக்கான சங்கத்தின் புதிய கிளை  சதாசிவம் தலைமையில் தொடங்கப் பட்டது. கீழவழுத்தூர் புதிய கிளைக்கு தலைவராக சதாசிவம்,  செயலாளராக வினோத்குமார், பொருளாளராக ஜெயந்தி ஆகி யோர் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட துணைத்தலைவர் பழ. அன்புமணி விளக்க உரையாற்றி னார்.

குடிநீர் இயந்திரம் வழங்கல்

மயிலாடுதுறை, ஆக.30 - மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா அல்லிவிலாகம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 26 ஆண்டுகளுக்கு முன்பு படித்த மாணவர்கள் மற்றும்  முன்னாள் ஆசிரியர்கள் சந்திப்பு நடைபெற்றது. விழாவில், பள்ளிக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்  இயந்திரம் வழங்கப்பட்டது.

நாடு தழுவிய மறியல் போராட்டம்: செப்.4,5 திருவாரூரில் வாகனப் பிரச்சாரம்

திருவாரூர், ஆக.30 - ஒன்றிய பாஜக அரசின் மக்கள், தொழிலா ளர்கள், விவசாயிகள் விரோத செயலை கண்டித்து செப்.7 அன்று நாடு தழுவிய மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. இதனை விளக்கி செப்.4, 5 தேதிகளில் திரு வாரூர் மாவட்டம் முழுவதும் வாகனப் பிரச்சா ரம் நடைபெறும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்டச் செய லாளர் ஜி.சுந்தரமூர்த்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விண்ணை முட்டும் விலை வாசி உயர்வு, அதிகரித்து வரும் வேலை யின்மை ஆகியவற்றுக்கு காரணமான ஒன்றிய மோடி அரசை கண்டித்து செப்.7  அன்று மாபெரும் ரயில் மறியல் போராட்டம் நடைபெறவுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில், மூன்று இடங்க ளில் ரயில் மறியல் மற்றும் ஏழு இடங்களில்  தபால் நிலையம் முன்பு மறியல் என 10 மையங்களில் போராட்டம் நடைபெறுகிறது. இதில் திருத்துறைப்பூண்டியில் நடைபெறும் ரயில் மறியல் போராட்டத்தில் சிபிஎம் மத்திய குழு உறுப்பினர் பெ.சண்முகம் பங்கேற்கிறார். திருவாரூர் ரயில் மறியல் போராட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி தலைமை வகிக்கிறார்.  மறியலை விளக்கி செப்டம்பர் 4, 5 ஆகிய தேதிகளில் மாவட்டம் முழுவதும் பிரச்சா ரம் நடைபெறுகிறது. கட்சியின் வெகுஜன அமைப்பு சார்பாக 10 ஆயிரம் பேர் இப்போ ராட்டத்தில் கலந்துகொண்டு, ஒன்றிய மோடி அரசின் நாசகர திட்டங்களை முறியடிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

செப்.27 தமிழ்ப் பல்கலை.யில் ‘வள்ளலார் 200’ பேச்சுப்போட்டி

தஞ்சாவூர், ஆக.30 - தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில், வள்ளலார் 200 ஆம் ஆண்டு  நிறைவையொட்டி, மாபெரும் தமிழ்ப் பேச்சுப்  போட்டி செப்.27 அன்று நடைபெறவுள்ளது. இராமலிங்க அடிகளாரின் 200 ஆவது  ஆண்டு விழாவை முன்னிட்டு, 2022 செப்டம் பர் 12 அன்று மாவட்ட அளவிலான பேச்சுப்  போட்டிகளைத் தமிழ்ப் பல்கலைக்கழகமும், சன்மார்க்க மன்றமும் தொடங்கி வைத்தன.  தற்போது வள்ளலார் 200 ஆவது  ஆண்டு நிறைவையொட்டி, சன்மார்க்கம்  தொடர்பான பல்வேறு தலைப்புகளை மைய மாக வைத்து, தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கல்லூரி, பல்கலைக்கழக நிலையில் உள்ள மாணவர்களுக்கு மாநில அளவிலான பேச்சுப் போட்டிகள் செப்டம்பர் 27 அன்று நடைபெற உள்ளன. இதற்கான அறிவிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த துணை வேந்தர் வி.திருவள்ளுவன் போட்டிக்கான அறிவிக்கையை வெளியிட, சன்மார்க்க மன்றத் தலைவரும், வடலூர் தலைமை சமரச  சுத்த சன்மார்க்க சத்திய சங்கத் தலைவரு மான அருள் நாகலிங்கம் பெற்றுக் கொண்டார். இப்போட்டியில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசு ரூ.30 ஆயிரம், இரண்டாம் பரிசு  ரூ.25 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.10 ஆயிரம்  வழங்கப்பட உள்ளது. மேலும் சிறந்த 10  பேச்சாளர்களுக்கு தலா ரூபாய் ஆயிரம்  வழங்கப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வேளாண் விஞ்ஞானிகள்,  களப் பணியாளர்கள் கலந்துரையாடல்

தஞ்சாவூர், ஆக.30-  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டார வேளாண்மை மையத்தில், வேளாண்மை உழவர் நலத் துறையின் கீழ் செயல்படும் அட்மா திட்டத்தில், வேளாண்  விஞ்ஞானிகள் மற்றும் களப் பணியாளர்கள் கலந்து ரையாடல் நிகழ்ச்சி நடந்தது. வேளாண்மை உதவி இயக்குநர்(பொ) ராணி தலைமை வகித்தார். வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி  நிலைய பேராசிரியர் அருண் உரையாற்றினார். வேளாண்  உதவி அலுவலர்கள், வட்டார தொழில்நுட்ப மேலா ளர்கள், உதவி தொழில்நுட்ப மேலாளர்கள், பயிர் அறு வடை களப்பணியாளர்கள், உழவர் நண்பர்கள், பண்ணை  தகவல் ஆலோசனை குழுவினர் கலந்து கொண்டனர். 

நலத்திட்ட பணிகளை  துவக்கி வைத்து ஆய்வு

தஞ்சாவூர், ஆக.30-  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி சட்டமன்றத் தொகுதியில், ரூ.3 கோடியே 16 லட்சம் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை பேராவூரணி சட்டப் பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் துவக்கி வைத்தார்.  அம்மையாண்டி ஊராட்சி செங்கமங்கலம் - சித்தா திக்காடு தார்ச்சாலை அமைக்கும் பணியை சட்டப்பே ரவை உறுப்பினர் நா.அசோக்குமார் தலைமை வகித்து  தொடங்கி வைத்தார். கொன்றைக்காடு அரசு உயர்நிலைப்  பள்ளியில், 6 வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டடப் பணி களை அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.   மணக்காடு ஊராட்சி நெல்லியடிக்காடு காளியம் மன் கோவிலில் தார்ச்சாலை ரூ.8 லட்சத்தில் அமைக்கப் பட்டு பணி முடிந்த நிலையில் அதனை பொதுமக்கள் பயன் பாட்டிற்கு திறந்து வைத்தார். வீரக்குடி - மணக்காடு முனிக்கோயில் அருகே விழா மேடை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினார். பின்னர், மணக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் குழந்தைநேயப் பள்ளிக் கட்டிடம் கட்டும் பணிகள் தொடங்கி நடைபெற்று வரு வதை ஆய்வு செய்தார். 

சாலை பாதுகாப்பு  விழிப்புணர்வு நிகழ்ச்சி 

தஞ்சாவூர், ஆக.30-  தஞ்சை மருதுபாண்டியர் கல்லூரியில், தஞ்சை ரோட்டரி கிளப் ஆப் கிங்ஸ் சார்பாக ரோட்ராக்ட் கிளப்  துவக்க விழா மற்றும் சாலை பாதுகாப்பு, விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.  கல்வி நிறுவனங்களின் தலைவர் கொ.மருது பாண்டியன் தலைமை வகித்தார். விழாவில், சிறப்பு விருந்தினர்களான தஞ்சை வட்டாரப் போக்குவரத்து அலு வலர் கே.முருகன், மோட்டார் வாகன ஆய்வாளர் வி.ஆனந் தன் ஆகியோர் சாலை பாதுகாப்பு மற்றும் போக்கு வரத்து விதிமுறைகள் குறித்து உரையாற்றினர். தாமரை  இண்டர்நேஷனல் பள்ளி முதல்வர் மற்றும் ரோட்டரி கிளப்  ஆப் தஞ்சாவூர் கிங்ஸ் உறுப்பினர் ஜெயஸ்ரீ பத்ரிநாத், ரோட்டரி கிளப் துணை ஆளுநர் எம்.கருணா ஆகி யோர் உரையாற்றினர்.

மனநல மையத்தில் சிகிச்சை பெற்றவர் சொந்த மாநிலத்துக்கு அனுப்பி வைப்பு

புதுக்கோட்டை, ஆக.30 - மனநல மையத்தில் சிகிச்சை பெற்று குணமடைந்த தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர், சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டார். கடந்த 19.5.2023 அன்று ஆதரவற்று மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த பிரபுதாஸ் என்பவர் இலுப்பூர் காவல் நிலையத்தின் உதவியுடன் மீட்கப்பட்டு புதுக்கோட்டை டாக்டர் முத்துலட்சுமி அம்மையார் நினைவு அரசு மருத்துவமனையில் உள்ள மனநல மையத்தில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.  ஒருங்கிணைந்த மனநல மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டதன் பயனாக, பிறர் உதவியின்றி, தன்னுடைய அன்றாட தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதோடு, மையத்தில் உள்ள மற்றவர்களுக்கும் உதவி செய்யும் அளவிற்கு அவருடைய மனநிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து பிரபுதாஸ் தனது குடும்பத்தினர் பற்றிய விவரங்களை தெரிவித்தார். பின்னர் அவரது உறவினர்கள் தெலுங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டத்தில் வசிக்கிறார்கள் என்பதை மாவட்ட நிர்வாகத்தினர் உறுதி செய்தனர். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா முன்னிலையில், பிரபுதாஸ் அவரது சகோதரர் பிரபாகர் என்பவருடன் மீண்டும் சேர்த்து வைக்கப்பட்டார். 

விவசாயத் தொழிலாளர் சங்க மண்டல பயிற்சி முகாம்

நீடாமங்கலம், ஆக.30 - அகில இந்திய விவசா யத் தொழிலாளர் சங்கத் தின் திருச்சி மண்டல பயிற்சி  முகாம் திருவாரூர் மாவட்டம்  நீடாமங்கலத்தில் நடை பெற்றது.  ஆக.30, 31 ஆகிய இரண்டு நாட்கள் பயிற்சி முகாமின் முதல் நாளான புதன்கிழமை அமர்விற்கு மாநில துணைத் தலைவர்  எம்.முருகையன் தலைமை வகித்தார். வரவேற்பு  குழு தலைவர் எஸ்.தமிழ்ச் செல்வன் வரவேற்றார். முதல் நாள் பயிற்சி முகா மின் ஆசிரியர்களாக கந்தர்வ கோட்டை சட்டமன்ற உறுப்பி னர் எம்.சின்னத்துரை, விவ சாயத் தொழிலாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் வீ.அமிர்தலிங்கம், மாநில செயலாளர் எஸ்.சங்கர் ஆகி யோர் பங்கேற்றனர். மாநிலப் பொருளாளர் அ.பழனிச்சாமி, மாவட்டச் செயலாளர் பி.கந்தசாமி, மாவட்டத் தலைவர் ஆர்.குமாரராஜா, மாவட்டப் பொருளாளர் ஆறுபிரகாஷ், மாநிலக் குழு உறுப்பினர் ஜாக்குலின் மேரி, சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் ஐ. வி.நாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம்

திருவாரூர், ஆக.30 -  திருவாரூர் மாவட்ட விவசாயிகளின் குறைதீர்க்கும்  கூட்டம் ஆக.31 அன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெறவுள்ளது.  இதில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக் கலைத்துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, கூட்டு றவுத்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி மற்றும்  உள்ளாட்சித்துறை, வங்கியாளர்கள் மற்றும் பிற சார்பு துறை அலுவலர்கள் கலந்து கொண்டு, விவசா யிகளின் குறைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு பதி லளிக்க உள்ளனர். திருவாரூர் மாவட்ட முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள், தங்கள் விவசாயம்  சார்ந்த கோரிக்கைகளை தெரிவித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.

வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டம்

திருச்சிராப்பள்ளி, ஆக.30 - வருவாய்த்துறை அலு வலர் சங்கத்தினர் கைது செய்யப்பட்டதை கண்டித்து திருச்சியில் போராட்டம் நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரின் ஊழியர் விரோதப் போக்கு மற்றும்  ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினரின் அரசியல் தலையீட்டினை கண்டித் தும், கள்ளக்குறிச்சி வட்டாட் சியர் மனோஜ் முனியன், பணியிடை நீக்கத்தினை ரத்து செய்ய வலியுறுத்தியும் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், சேலம், திருவண் ணாமலை ஆகிய 5 மாவட் டங்களை சேர்ந்த வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தி னர் செவ்வாயன்று காத்தி ருப்பு போராட்டத்தில் ஈடு பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 25 பெண்கள் உள் பட 200 பேரை போலீசார் கைது செய்தனர்.  இதனை கண்டித்து தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க திருச்சி மாவட்ட மையம் சார்பில்,  அனைத்து வருவாய்த் துறை யினரும் பணிகளைப் புறக் கணித்து புதனன்று திருச்சி  மாவட்ட ஆட்சியர் அலு வலக வளாகத்தில் போராட் டத்தில் ஈடுபட்டனர்.  போராட்டத்திற்கு சங்க மாவட்டத் தலைவர் பிரகாஷ் தலைமை வகித்தார். கோரிக் கைகளை விளக்கி தமிழ்நாடு வருவாய்த்துறை அலு வலர் சங்க மாவட்டச் செய லாளர் பிரேம்குமார், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பால்பாண்டி, மாவட்ட செய லாளர் பழனிச்சாமி, மாநில  துணைத்தலைவர் பெரிய சாமி ஆகியோர் பேசினர்.  பேராவூரணி வருவாய்த்துறை அலுவ லர்கள் பணிகளை புறண் கணித்து, தஞ்சாவூர் மாவட் டம் பேராவூரணி வட்டாட்சி யர் அலுவலகம் முன்பு  வெளிநடப்பு போராட்டத் தில் ஈடுபட்டனர். போராட்டத் திற்கு சங்கத்தின் வட்டக்  கிளை தலைவர் ஜெயதுரை  தலைமை வகித்தார். அலுவ லர்கள் அனைவரும் வெளி நடப்பு போராட்டத்தில் ஈடு பட்டதால், ஏராளமான பொது மக்கள் தாலுகா அலுவலகம் வந்து தங்களது பணிகள் நடைபெறாததால் திரும்பிச் சென்றனர்.