districts

img

பட்டுக்கோட்டையார் நகர் பட்டா பிரச்சனை: 10 நிமிட பயணத்திற்கு 7 மாதங்களா?

திருப்பூர், மார்ச் 11- திருப்பூர் மாநகராட்சிக்கு உட் பட்ட பட்டுக்கோட்டையார் நகரில்  நீண்ட காலமாக நீடிக்கும் பட்டா பிரச் சனைக்கு தலைமைச் செயலாளர் மூலம் நடவடிக்கை எடுக்கும்படி முதல்வருக்கு கோரிக்கை விடப்பட் டுள்ளது. பட்டுக்கோட்டையார் நகர் குடியி ருப்போர் நல சங்கத்தின் சார்பில் நிர் வாகிகள் எஸ்.சுந்தரம், என்.சேகர் மற் றும் ஆறுக்குட்டி உள்ளிட்டோர் திங் கள் அன்று திருப்பூர் மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சி யர் த.கிறிஸ்துராஜை நேரில் சந்தித்து  மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது: பட்டுக்கோட்டையார் நகர் வடக்கு பகுதியில் குடியிருக்கும் 196  குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா  வழங்க கேட்டு 33 ஆண்டுகள் தொடர்  முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகி றது. கடந்த 1999ல் கே.சுப்பராயன்  சட் டமன்ற உறுப்பினராக இருந்தபோது பட்டா வழங்க உத்தரவு பெற்றுக் கொடுத்தார். அதன் அடிப்படையில் 72 குடும்பங்கள் முதல் கட்டமாக பட்டா பெற்றனர். ஒரு தனிநபர் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்ததன் காரணமாக சிக்கல் ஏற் பட்டது. குடியிருப்போர் நலச் சங்கம்  அமைத்து தொடர் முயற்சி மேற் கொண்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.தங்கவேல் உள் ளிட்டோரின் உதவியுடன் கடந்த 8  ஆண்டுகளுக்கு முன் வழக்கு முடி வுக்கு கொண்டு வரப்பட்டது. அதற்கு  பிறகும் மீதம் உள்ளவர்களுக்கு பட்டா வழங்க கேட்டு தொடர்ந்து போராடி வருகின்றனர்.  கடந்த பிப்ரவரி 6 அன்று குடியி ருப்போர் நலச் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடைபெற் றது. அப்போது மாவட்ட ஆட்சித்த லைவர் மூன்று வாரத்தில் பட்டா  வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவாதம் அளித்தார். சட்ட மன்ற உறுப்பினர் க.செல்வராஜ் முயற்சியில் மாவட்ட அளவில் பணி கள் முடிவடைந்து சென்னையில் உள்ள நிலச் சீர்திருத்த ஆணையர் அலுவலகத்தில் ஆணையர் ஒப்புத லுக்கு கோப்புகள் உள்ளது. கடந்த 7  மாதங்கள் கோப்புகள் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. ஆணையரை நேரில் சந்தித்து கேட்டால் தலைமை  செயலாளர் ஒப்புதல் பெற வேண்டும்  என்கிறார். அவர் அலுவலகத்திற் கும், தலைமை செயலாளர் அலுவல கத்திற்கும் 10 நிமிட பயணம் தான். இதற்கு 7 மாதங்கள் என்றால், என்ன  செய்வது? தலைமைச் செயலாளர் மூலம் பட்டா வழங்க தமிழ்நாட்டு முத லமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று திங்களன்று மாவட்ட ஆட் சியர் த.கிறிஸ்துராஜை நேரில் சந் தித்து கோரிக்கை மனு அளித்தனர்.