districts

img

6-ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழா மாவட்ட ஆட்சியர் தலைமையில் வரவேற்புக்குழுக் கூட்டம்

புதுக்கோட்டை, ஜூன் 22-

      மாவட்ட நிர்வாகமும் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 6 வரை  6-ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழா நடைபெறவுள்ள நிலையில் அதற்கான வரவேற்புக்குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.  

    கூட்டத்தில் ஆட்சியர் கூறுகையில், ‘‘6வது  புத்தகத் திருவிழா புதுக்கோட்டை நகர்மன்றத் தில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 6 வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது. இப்புத்தகத் திரு விழாவில் பல்வேறு தலைப்புகளின் கீழ் ஆயி ரக்கணக்கான புத்தகங்கள் மக்களின் பார்  வைக்காக நூற்றுக்கும் மேற்பட்ட அரங்கங்க ளில் விற்பனைக்காக வைக்கப்பட உள்ளது.

     மேலும் இந்த புத்தகத் திருவிழாவில் அறி ஞர்கள், சொற்பொழிவாளர்கள் உள்ளிட்ட  பல்வேறு தலைப்புகளின் கீழ் சொற்பொழி வாற்றவும் உள்ளனர்.

    மேலும், கடந்த ஆண்டு நடைபெற்ற புத்த கத் திருவிழாவில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வாசகர்கள் வருகைதந்து ரூ.3 கோடி மதிப்பி லான புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டது. இதில் 50,000 மாணவர்கள் பங்கேற்றனர்.  

    மேலும் இப்புத்தகத் திருவிழா குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத் தும் வகையில் பள்ளி, கல்லூரி மற்றும் பொது மக்கள் பங்கேற்புடன் பொதுஇடங்களில் புதுக்  கோட்டை வாசிக்கிறது என்ற மாபெரும் நிகழ்ச்சி யும் நடத்தப்பட உள்ளது.

    இந்த புத்தகத் திருவிழாவில், பள்ளிக் கல்வித்துறை, கல்லூரிகள் கல்வித்துறை, ஊரக வளர்ச்சித்துறை, பொது நூலகத்துறை, மருத்துவத்துறை, நகராட்சித்துறை, காவல் துறை, மகளிர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறை கள் ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும். மேலும் 6வது புதுக்கோட்டை புத்தகத் திருவிழா வில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், இளை ஞர்கள், புத்தக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்  கள் ஆர்வமுடன் பங்கேற்று அதிக அளவிலான  புத்தகங்களை வாங்கி பயன்பெற வேண்டும்’’ என்றார்.

    கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நா.கவிதப்பிரியா, மாவட்ட இயக்க மேலாண்மை அலகு திட்ட இயக்குநர் ரேவதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) தமிழ்செல்வி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கி.கருணாகரன், புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பாளர்கள் தங்கம்மூர்;த்தி, நா.முத்துநிலவன், அ.மணவாளன், எஸ்.டி.பால கிருஷ்ணன், எம்.வீரமுத்து, ராசி.பன்னீர்செல் வன், மு.கீதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.