districts

img

வன்னியன்விடுதி ஜல்லிக்கட்டு: 665 காளைகள் பங்கேற்பு: 52 பேர் காயம்

புதுக்கோட்டை, ஜன.17 - புதுக்கோடை மாவட்டம் ஆலங்குடி அருகே வன்னியன்விடுதியில் திங்கள் கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் 665 காளைகள் பங்கேற்றன.  காளைகளை அடக்க முயன்ற 52 பேர் காயமடைந்தனர். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங் குடி அருகே வன்னியன் விடுதியில் திங்கள்கிழமையன்று ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் கொடி யசைத்து தொடங்கி வைத்தனர்.  மாவட்ட  ஆட்சியர் கவிதா ராமு, சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.சின்னதுரை (கந்தர் வகோட்டை) வை.முத்துராஜா (புதுக் கோட்டை) ஆகியோர் முன்னிலை வகித் தனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதி களில் இருந்து சுமார் 665 காளைகள்  கலந்து கொண்டன. காளைகள் மருத் துவ குழுவினர் பரிசோதனைக்குப் பிறகு  வாடிவாசல் இருந்து அவிழ்த்து விடப் பட்டன. காளைகளை அடக்குவதற்கு 300 மாடுபிடி வீரர்கள் களமிறக்கப்பட்டனர். ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெற்ற வீரர்கள் மற்றும் காளைகளுக்கு தங்க மோதிரம், தங்க நாணயம், வெள்ளி  நாணயம், ரொக்கப்பரிசு உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட் டன. காளைகளை அடக்கிய மாடுபிடி  வீரர்கள் உள்ளிட்ட 52 பேர் காயமடைந்த னர். அவர்களுக்கு மருத்துவக் குழுவி னர் முதலுதவி சிகிச்சையளித்தனர்.