districts

img

5ஆவது நாளாக உள்வாங்கிய கடல் படகு போக்குவரத்து தொடர் பாதிப்பு

நாகர்கோவில், ஆக. 5-

   கன்னியாகுமரி கடல் தொடர்ந்து 5-ஆவது நாளாக சனிக்கிழமை கடல் நீர்மட்டம் தாழ்ந்து உள் வாங்கி காணப்பட்டது. அதேநேரத்தில் இன்னொரு புறம் கடல் சீற்றமாகவும் கொந்தளிப்பாகவும் காணப் பட்டது.

   கன்னியாகுமரி கடலில் அடிக்கடி கடல் நீர்மட்டம் தாழ்வது, கடல் நீர்மட்டம் உயர்வது, கடல் சீற்றம், கடல்கொந்தளிப்பு, ராட்சத அலைகள் ஆக்ரோஷமாக எழும்பி வீசுவது, அலையே இல்லாமல் கடல் அமை தியாக குளம்போல் காட்சிய ளிப்பது, கடல் நிறம் மாறு வது போன்ற பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துவரு கின்றன.

   குறிப்பாக அமா வாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் இந்த இயற்கை மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.  இந்தநிலையில், பவுர்ணமியையொட்டி கடந்த 4 நாட்களாக கன்னியா குமரியில் கடல் நீர்மட்டம் தாழ்ந்து உள்வாங்கி காணப்பட்டது. இதனால், கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திரு வள்ளுவர் சிலைக்கு காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்கு வரத்து தொடங்கப்பட வில்லை. படகில் சென்று பார்ப்பதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகுத்துறை நுழைவு வாயிலில் காத்திருந்த சுற்று லா பயணிகள் ஏமாற்றத்து டன் திரும்பி சென்றனர்.

     மேலும் கன்னியாகுமரி, சின்னமுட்டம், வாவத் துறை, கோவளம், கீழமணக் குடி, மணக்குடி போன்ற கடற்கரை கிராமங்களில் கடல் சீற்றமாக காணப் பட்டது. இந்த கடற்கரை கிராமங்களில் சுமார் 10 அடி முதல் 15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழும்பி வீசின. இதனால் சனிக்கிழ மையன்று காலை கன்னி யாகுமரியில் இருந்து வட்டக் கோட்டைக்கு படகு சவாரி யும் நிறுத்தப்பட்டது.