அரியலூர், நவ.21 - ஜெயங்கொண்டம் அருகே 50 ஆண்டு களுக்கு மேலாக ஆக்கிரமிப்பு செய்யப் பட்ட ஏரியின் வரத்து வாய்க்காலை மீட்டு, நீர்நிலையை பாதுகாப்பதற்கு உதவி செய்த ஊராட்சித் தலைவரை பொதுமக்கள் பாராட்டினர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மேலணிக்குழி கிராமத்தில் சுமார் 2000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில் கிராமத்தில் அமைந்துள்ள மலட்டு ஏரிக்கு நீர் ஆதா ரத்தை பெற்று தரும் வரத்து வாய்க்கால் கள் தூர்வாரப்படாமலும், ஆக்கிரமிப்புகள் அதிக அளவிலும் இருந்ததால், மழைக் காலங்களில் நீர் வரத்தின்றி இந்த ஏரி வறண்டு கிடந்தது. இந்நிலையில், வறண்டு கிடக்கும் மலட்டு ஏரியை மீட்பதற்கு கிராம ஊராட்சி தலை வர் முத்துக்குமாரசாமி பொதுமக்கள் ஒத்து ழைப்புடன் முயற்சி எடுத்தார். இதன் விளை வாக தற்போது மலட்டு ஏரியின் வரத்து வாய்க்கால் ஓடை ஆக்கிரமிப்புகள் காவல் துறை பாதுகாப்புடன் அகற்றப்பட்டன. இதன் மூலம் வரத்து வாய்க்கால் ஓடை பொலிவு பெற்று ஏரிக்கு நீர் வரத்து செல்ல ஏதுவாக அமைந்துள்ளது. இதேபோன்று ஏற்கனவே கிராமத்தில் அமைந்துள்ள ஏரியின் ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஊராட்சித் தலைவர் ஏரியை மீட்ட நிலையில், தற்போது 2-வது முறையாக ஏரியை மீட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து மேலணிக்குழி ஊராட்சி மன்ற தலைவர் முத்துக்குமாரசாமி செய்தி யாளரிடம் தெரிவிக்கையில், “ஒரு காலத்தில் எங்கள் ஊர் நிலத்தடி நீர் நிறைந்த பகுதி யாக இருந்தது. தற்போது ஆக்கிரமிப்புகள் காரணமாக ஏரி, குளங்கள் வற்றி வரத்து வாய்க்கால் ஓடைகள் இருக்கிற இடம் தெரி யாமல் போய்விட்டன. ஆக்கிரமிப்பு செய்யும் பொதுமக்களிடமிருந்து எதிர்ப்புகளை வந்தா லும் பரவாயில்லை. நீர்நிலைகளை பாது காப்பது எனது கடமை. அடுத்த தலைமுறை நன்றாக வாழ வேண்டும் என்பதே எனது குறிக் கோள்” என்றார்.