புதுக்கோட்டை, ஏப்.11 - தெம்மாவூர் ஊராட்சியில், ஊராட்சி மன்றத் தலைவர் உட்பட 40 பேர் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் முன்னிலை யில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் புதன் கிழமை தங்களை இணைத்துக் கொண்டனர். புதுக்கோட்டை மாவட்டம் குன்றாண்டார் கேவில் ஒன்றியத்தில் உள்ளது தெம்மா வூர் ஊராட்சி. இங்கு ஊராட்சி மன்றத் தலை வராக (பொ) இருப்பவர் ரெங்கநாயகி சங்கிலிமுத்து. இவர் புதன்கிழமை இரவு கந்தர்வகோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் முன்னிலையில் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். மேலும் அவர், தெம்மாவூர் ஊராட்சிக் குட்பட்ட தெம்மாவூர், வடுதாவயல், பழை யூர், விடானிவயல் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த செல்வராஜ், பழனிவேல், சுரேஷ், ஆறுமுகம், கருப்பையா, முருகேசன் உள்ளிட்ட 40 பேர் கட்சியின் மாநிலச் செய லாளர் முன்னிலையில் தங்களை இணைத் துக் கொண்டனர் கட்சியில் சேர்ந்தவர்களுக்கு செந்துண்டு அணிவித்து கே.பாலகிருஷ்ணன் வாழ்த்தி னார். மாநிலக் குழு உறுப்பினர் எம்.சின்னதுரை எம்எல்ஏ., மாவட்டச் செயலாளர் எஸ்.கவி வர்மன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ஸ்ரீதர், ஒன்றியச் செயலாளர் எஸ்.கலைச் செல்வன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.