நாகர்கோவில், ஜூன் 9-
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி யில் பொது வெளிகளில் கழிவுநீர் கொட்டும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், கழிவு நீர் கொண்டு செல்லும் வாகனங்களை 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை பதிவு செய்யவும் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் புத்தேரி, ஒழுகினசேரி உள்ளிட்ட பகுதிகளில் கழிவு நீர் கொண்டு செல்லும் வாகனங்களை ஆய்வு செய்தனர். அப்போது 4 வாகனங்கள் பதிவு செய்யாமல் இயங்கி வந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அந்த 4 வாகனங்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து கழிவுநீர் ஏற்றி செல்லும் வாகன உரி மையாளர்களுக்கு ஆலோசனை கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது. அப்போது கழிவுநீர் கொண்டு செல்லும் வாகனங்களை கட்டாயம் இரண்டு ஆண்டு களுக்கு ஒரு முறை பதிவு செய்ய வேண்டும் என்றும், பொதுவெளியில் கழிவு நீரை கொட்டக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டது.