சாலையை மறைக்கும் கருவேல மரங்கள்
கிழக்கு கடற்கரை சாலையில் இரு புறமும் கருவேல மரங்கள் மண்டிக் கிடப்ப தால், எதிரே வரும் வாகனங்கள் தெரியாத நிலை உள்ளது. அதிகாலை நேரத்தில் இரு ளில் கருவேல மரங்கள் சாலையை மறைத்த தால், வழியில் இருந்த சிறு பாலத்தில் தெரியாமல் கார் மோதி விபத்துக்குள்ளான தாக கூறப்படுகிறது. எனவே, கிழக்கு கடற்கரை சாலையில் இரண்டு பக்கமும் உள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், சேது பாவாசத்திரம், மல்லிப்பட்டினம் பகுதியில் அவசர விபத்து சிகிச்சை மையம் அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சாவூர், ஜன.20 - தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த னர். 7 பேர் தஞ்சை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் மூனாவது மைல் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த வர்கள் மரிய செல்வராஜ் (37), இவரது மனைவி பாத்திமா மேரி (31), இவர்க ளது மகன் சந்தோஷ் செல்வம் (7) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த உற வினர்களான சண்முகத்தாய் (53), சரஸ்வதி (50), கணபதி (52), பாக்கிய ராஜ் (64), ஞானம்மாள் (60), ராணி (40) சின்னப்பாண்டி (40) ஆகிய 11 பேரும், வேளாங்கண்ணியில் உள்ள தேவா லயத்திற்கு செல்வதற்காக வெள்ளிக் கிழமை இரவு டவேரா காரில், ஊரி லிருந்து புறப்பட்டனர். காரை ஓட்டுநர் சின்னப்பாண்டி ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில், சனிக்கிழமை அதி காலை சுமார் 5 மணியளவில் தஞ்சா வூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே மனோரா சுற்றுலாத்தலம் உள்ள பகுதியில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோரத்தில் இருந்த சிறு பாலத்தில் மோதி விபத்துக்கு உள்ளானது. இதில் ராணி, சின்னபாண்டி, பாக்ய ராஜ், ஞானம்மாள் ஆகிய நால்வரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் மற்றும் தனியார் ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு வந்து, சேதுபாவாசத்திரம் காவல்துறையினர் மற்றும் அருகில் இருந்தோர் உதவியுடன் மீட்புப் பணி யில் ஈடுபட்டனர். இறந்தவர்களின் உடல்களை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவ மனைக்கு உடற்கூராய்வுக்காக காவல் துறையினர் அனுப்பி வைத்தனர். மேலும், காயமடைந்தவர்களுக்கு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை யில் முதலுதவி சிகிச்சை அளிக்கப் பட்டு, மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். துணை காவல் கண்காணிப்பாளர் ஆய்வு சம்பவ இடத்தை பட்டுக்கோட்டை காவல்துறை கண்காணிப்பாளர் பிரித் விராஜ் சவுகான் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதுகுறித்து, சேதுபாவா சத்திரம் காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்ற னர். முதலமைச்சர் இரங்கல் இச்சம்பவம் குறித்து இரங்கல் தெரி வித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விபத்தில் உயிரி ழந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்ச மும், அதிக காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000, சிறிய காயமடைந்தவர் களுக்கு ரூ.25,000 நிவாரண உதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.