districts

திருச்சி முக்கிய செய்திகள்

வாய்க்காலில் கார் கவிழ்ந்த விபத்தில் 4 பேர் காயம் ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு பாராட்டு

தஞ்சாவூர், அக்.18 - தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டையை சேர்ந்தவர் நடராஜன் (64). இவர் தனது குடும்பத்தினர் ஏழு பேருடன் கோயம்புத்தூருக்கு புதன் கிழமை காலை மஹிந்திரா சைலோ காரில் சென்று கொண்டிருந்தார். காரை  ஓட்டுநர் நடராஜன் ஓட்டினார். தஞ்சாவூர் அருகே - நெ.8 கரம்பை பைபாஸ் சாலையில் கார் சென்று  கொண்டிருந்த போது, எதிரே வந்த லாரிக்கு வழி விடுவதற்காக காரை சாலையோரம் ஒதுக்கியுள்ளார். ஆனால் கார் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல், சாலையில் கொட்டி வைத்திருந்த நெல் குவியல் மீது மோதி அரு கில் இருந்த வாய்க்காலுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதையடுத்து விபத்தில் சிக்கி இருந்த மூவரை, அங்கிருந்த கிராம மக்கள் மீட்டனர். கார் உரிமையாளரான நடராஜன், ஓட்டுநர் நடராஜன் (65),  ஜெயலட்சுமி (41), சுலோட்சனா (68) ஆகிய நான்கு பேரும் காரில் சிக்கிக்  கொண்டனர்.  அப்போது அவ்வழியே தஞ்சாவூர் மருத்துவக்  கல்லுாரி மருத்துவமனைக்கு சென்ற 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள், விபத்தை பார்த்தவுடன் காரில் சிக்கிக் கொண்டவர்களை மீட்க, தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். ஆனால் அரை மணி நேரத்திற்கும் மேலாக தீயணைப்பு துறையினர்  வராததால், ஆம்புலன்ஸ் ஊழியர்களான செவிலியர் தட்சிணாமூர்த்தி, ஓட்டுநர் ஹரிஹரசுதன் இருவரும், கிராம மக்கள் உதவியுடன் காரில் சிக்கி இருந்தவர்களை மீட்டு, அங்கேயே முதலுதவி அளித்தனர். பின்னர், காயம் அடைந்தவர்களை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச் சைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து கள்ளப்பெரும்பூர் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.   விபத்தை கண்டவுடன், ஆம்புலன்ஸை நிறுத்தி முதலுதவி செய்த ஊழி யர்களை கிராம மக்கள் பாராட்டினர்.

பாலஸ்தீனம் மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் தமுஎகச வலியுறுத்தல்

தஞ்சாவூர், அக்.18-  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் தஞ்சாவூர் மாநகரக் கிளை கூட்டம், சரோஜ் நினைவகத்தில் செவ்வாயன்று மாலை நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு, கிளைத் தலைவர் பிம்பம் சாகுல் தலைமை வகித்தார். க.முரளி வரவேற்றார். மாவட்ட  செயலாளர் இரா.விஜயகுமார் நோக்க உரையாற்றினார். த.சுத்தானந்தன், சா.தமிழ்வாணன், இந்துமணி, சாமி.மல்லிகா, அர்ஜுன் ஆகியோர் பாடல் பாடினர். திரைப் படங்கள் குறித்து பு.சந்தோஷ்குமார் விமர்சனம் செய்தார். க.ஆனந்தன், சந்திரசேகரன், பிரேம், முத்து மணிவண்ணன், இருதயராஜ், இராச.பத்மநாபன், சுரேஷ் லலிதன் ஆகியோர், நூல்களில் ‘படித்ததில் பிடித்தது’ குறித்து பேசினர். தமிழினியாள் எழுத்த னுபவ பகிர்வு குறித்து பேசினார். “காஷ்மீர்: நேற்று - இன்று - நாளை” நூல் குறித்து த.பிரபு பேசினார். பயணங்க ளின் வழியே என்ற தலைப்பில் தமுஎகச மாநில துணை  பொதுச் செயலாளர் களப்பிரன் உரையாற்றினார். கவிஞர் வல்லம் தாஜூபால் நிகழ்ச்சியை ஒருங்கி ணைத்தார். சீலெஸ்ரீ நன்றி கூறினார். கூட்டத்தில், பாலஸ்தீனம் மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற் றப்பட்டது.

பூட்டியிருந்த வீடுகளில் கொள்ளையடித்தவர் கைது

கும்பகோணம், அக்.18- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், திருவிடைமரு தூர் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட அம்மா சத்திரம், சோழன் நகர், ஞானம் நகர், குருமூர்த்தி நகர் ஆகிய இடங்களில் பூட்டியிருந்த வீடுகளில் தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடந்து வந்தன. இதுகுறித்து வந்த புகாரின் பேரில், திருவிடை மருதூர் காவல்துறை கண்காணிப்பாளர் ஜாபர் சித்திக் மேற்பார்வையில், உட்கோட்ட தனிப்படை காவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வந்த  ரகசிய தகவலின் பேரில், தேப்பெருமாநல்லூர் கரிக்குளம்  முனிசிபாலிட்டி குடியிருப்பில் வசிக்கும் மோகன்ராஜை (29) சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர்.  விசாரணையில், மேற்படி நகர்ப் பகுதிகளில், பூட்டியிருந்த வீடுகளில் கடந்த அக்.12, 13 தேதிகளில் கடப்பாரை மற்றும் ஸ்க்ரூடிரைவரை பயன்படுத்தி  நகைகளை கொள்ளையடித்ததை அவர் ஒப்புக்கொண் டார். இதையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், அவரிடமிருந்து 10 பவுன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அக்.28 ஆலங்குடியில்  வேலைவாய்ப்பு முகாம்

புதுக்கோட்டை, அக்.18- கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு புதுக்கோட்டையில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தெரிவித்துள்ளதாவது: புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து  சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமை அக்.28  (சனிக்கிழமை) அன்று காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி  வரை புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடத்த உள்ளன. முகாமில் தொழில்துறை, சேவைத்துறை, விற்பனைத் துறை போன்ற பல்வேறு துறைகளைச் சார்ந்த 150-க்கும்  மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு,  தகுதியுள்ள நபர்களை வேலைக்கு தேர்ந்தெடுக்க உள்ள னர். 8 ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ,  டிப்ளமோ, பி.இ, நர்சிங் படிப்புகள் போன்ற கல்வித்  தகுதியுடைய 18 முதல் 40 வயதிற்குட்பட்ட வேலைநாடும்  இளைஞர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி இளைஞர்கள் தங்களது சுயவிவர குறிப்பு, ஆதார் அட்டை, பாஸ் போர்ட் அளவு புகைப்படம் மற்றும் கல்விச்சான்று நகல்களுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம்.  மேலும், “தமிழ்நாடு தனியார்துறை வேலை இணை யம்” www.tnprivatejobs.tn.gov.in வாயிலாக பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

விஏஓ அலுவலகம் மீண்டும்  அதிராம்பட்டினத்திற்கு மாற்றப்படுமா?

தஞ்சாவூர், அக்.18-  தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுகா, அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த மனித நேயப்பேரவை மற்றும் சமூக சேவை நிறுவனத் தலைவர் சி.கணேசன் பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அக்பர் அலி யிடம் அளித்த கோரிக்கை மனுவில், “அதிராம்பட்டினம் நகராட்சி சுமார் 50,000 மக்கள் தொகை கொண்ட பகுதி யாகும். இங்கு கிராம நிர்வாக அலுவலகம் கடந்த பல  ஆண்டுகளாக இயங்கி வந்தது. சுமார் 500 பேர்கூட  இல்லாத மழவேனிற்காடு கிராமத்திற்கு இந்த அலுவலகத்தை மாற்றம் செய்துள்ளனர்.  அதனால் அதிராம்பட்டினம் பகுதி மக்கள், வயதான வர்கள் சுமார் 3 கி.மீட்டருக்கு அப்பால் உள்ள  மழவேனிற் காடு சென்று, கிராம நிர்வாக அலுவலரை சந்திப்பதில் அதிக சிரமம் உள்ளது. கிராமத்தில் டெலிபோன் டவர் சரிவர கிடைப்பதில்லை. பேருந்து போக்குவரத்தும் இல்லை.  அரசு மருத்துவமனை அருகே எம்.எல்.ஏ நிதியில் கட்டப்பட்ட ஒரு நல்ல கட்டிடம் உள்ளது. எனவே, கிராம  நிர்வாக அலுவலர் அலுவலகத்தை, இங்கு இடமாற்றம் செய்ய உத்தரவிடுமாறு பணிவுடன் கேட்டுக் கொள் கிறேன் என கூறப்பட்டுள்ளது.

மருத்துவ மதிப்பீட்டு முகாம் 

தஞ்சாவூர், அக்.18 -  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில், பள்ளிக் கல்வித் துறை சார்பாக மாற்றுத் திறன் கொண்ட மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு  முகாம் நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியர் மாரி முத்து முகாமிற்கு தலைமை வகித்தார். பேராவூரணி சட்ட மன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் சிறப்பு விருந்தின ராக பங்கேற்றார். மருத்துவர்கள் பரிசோதனை செய்த னர். அதனடிப்படையில், மாற்றுத்திறன் மாணவர்கள் 11  பேருக்கு அடையாள அட்டை, 22 பேருக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி

மயிலாடுதுறை, அக்.18 - மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழைநீர் சேகரிப்பு  விழிப்புணர்வு பிரச்சார காணொளி வாக னம் மற்றும் மாணவ, மாணவிகளின் விழிப்பு ணர்வு பேரணி நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகா பாரதி புதனன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.  இந்த பேரணியானது மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொடங்கி மயிலாடுதுறை நகராட்சி வரதாச்சாரியார் பூங்காவில் முடிவடைந்தது. மாவட்ட வரு வாய் அலுவலர் மு.மணிமேகலை, தமிழ்நாடு  குடிநீர் வடிகால் வாரியம் நிர்வாகப் பொறியா ளர் ரவிச்சந்திரன் மற்றும் அரசு அலுவ லர்கள் கலந்து கொண்டனர்.

பட்டியலின மக்கள் காத்திருப்புப் போராட்டம்
இடுகாட்டிற்கு இடம் ஒதுக்கித் தர அதிகாரிகள் உறுதி

தஞ்சாவூர், அக்.18-  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை ஒன்றியக் குழு சார்பில், மாத்தூர் கிழக்கு ஊராட்சியில் வசிக்கும் பட்டியலின மக்களுக்கு, இறந்த சடலத்தை புதைக்க இடுகாட்டிற்கு இடம் ஒதுக்கக் கோரி, தஞ்சா வூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு செவ்வா யன்று காத்திருப்பு போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் கே.அபி மன்னன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன் போராட் டத்தை துவக்கி வைத்து பேசினார். மாவட்டச்  செயற்குழு உறுப்பினர் பி.செந்தில்குமார், மாவட்டக் குழு உறுப்பினர் பி.எம். இளங்கோ வன், மாநகர செயலாளர் எம்.வடிவேலன், ஒன்றியக் குழு உறுப்பினர்கள், கிளைச் செய லாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.  இதில், மாத்தூர் கிழக்கு ஊராட்சியில் வசிக்கும் பட்டியல் இன மக்கள், சட லங்களை புதைப்பதற்கு இடுகாடு, சாலை வசதி, எரியூட்டு மேடை, மதில் சுவர், அடிபம்பு அமைத்து தர வேண்டும். ஆதிதிரா விடர் நல தொடக்கப்பள்ளி கட்டிடம் பழுதான  நிலையில், இடிக்கப்பட்டு ஓர் ஆண்டு ஆகி யும் கட்டுமானப் பணி தொடங்கப்படாமல் உள்ளது. எனவே புதிய பள்ளி கட்டிடம் கட்டித்  தர வேண்டும். குளத்தை தூர்வாரி கரை  அமைத்து தர வேண்டும். புதுத் தெருவில் சிமெண்ட் சாலை அமைத்து தர வேண்டும். குடிமனை இல்லாத அனைவருக்கும் இலவச குடிமனைப் பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.  தஞ்சை வட்டாட்சியர் சக்திவேல் மற்றும் அதிகாரிகள் போராட்டம் நடத்தியவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும் என அதிகாரிகள் உறுதி யளித்தனர். இதையடுத்து காத்திருப்பு போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

தனியார் பள்ளிகளுக்கு
பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும்

தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு கோரிக்கை

திருச்சிராப்பள்ளி, அக்.18 - தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம் செவ்வாயன்று திருச்சி யில் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருச்சி மாவட்ட தலைவர் தமிழ்வா ணன் தலைமை வகித்தார்.  தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு சங்க  பொதுச் செயலாளர் இளங்கோவன், தலைவர் ராஜா, செயலாளர் முரு கேசன் ஆகியோர் சிறப்பு ரையாற்றினர். கூட்டத்தில், மாற்றுச் சான்றிதழ் இன்றி மாண வர் சேர்க்கை செய்யக் கூடாது. தனியார் பள்ளி களுக்கு பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும். இலவச சட்டத்தில் பயிலும்  மாணவர்களுக்கு தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணய  குழுவால் அங்கீ கரிக்கப்பட்ட தொகையை அரசு வழங்க வேண்டும். நிபந்தனைகள் இன்றி தனியார் பள்ளிகளுக்கு, அங்கீகாரம் ஆணைக்கான அனுமதி வழங்கப்பட வேண்டும். அனைத்து வகை தனியார் பள்ளிகளுக்கும் சொத்துவரி, மின் கட்ட ணம், சாலை வரி ஆகிய வற்றிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப் பட்டன.  திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர் மற்றும்  தஞ்சாவூர் மாவட்ட சங்கங்க ளின் பொறுப்பாளர்கள், பள்ளி தாளாளர்கள் கலந்து கொண்டனர். பொருளாளர் கேசன் பாலாஜி நன்றி கூறினார்.