districts

img

சென்னைக்குள் 4 மணி நேரம் மாநகர பேருந்துகளில் பயணம்

சென்னை, பிப். 29- அரசு விரைவு பேருந்து களில் முன்பதிவு செய்யும் பயணிகள் ரூ.40 கூடுதலாக செலுத்தி சென்னைக்குள் 4 மணி நேரம் பயணம் செய்யும் திட்டத்தை அமைச் சர் சிவசங்கர் அறிமுகம் செய்து வைத்தார். மாநகர் போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு மொபைல் செயலி மற்றும்  அரசு விரைவு போக்கு வரத்து கழக பேருந்தில் முன்பதிவு செய்யும் பயணி கள் ரூ.40 கூடுதலாக செலுத்தி கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இருந்து பிற இடங்களுக் கும், பிற இடங்களில் இருந்து கிளாம்பாக்கத்திற்கும் மாநகர் போக்குவரத்து கழக  பேருந்துகளில் 4 மணி நேரத்திற்குள் பயணம் செய்யும் திட்டத்தை தலைமை செயலகத்தில் அமைச்சர் சிவசங்கர் வியாழனன்று (பிப். 29) தொடங்கி வைத்தார். மாநகர் போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு செயலியின் வாயிலாக, நிர்வாகத்தின் மூலம் வெளி யிடப்படும் சுற்றறிக்கைகள் மற்றும் பல்வேறு செய்தி களை பணியாளர்கள் அறிந்து கொள்ளவும், பணி யாளர்கள் விடுப்பு எடுக்க விண்ணப்பிக்கவும் வழிவகை செய்யப்பட் டுள்ளது. மேலும், அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் முன்பதிவு செய்யும் பயணிகள், ரூ.40  கூடுதலாக கட்டணம் செலுத்தினால், கால  விரையமின்றி, கிளாம் பாக்கத்தில் இருந்து சென்னையின் பல்வேறு இடங்களுக்கும், சென்னை யின் பல்வேறு இடங்களில் இருந்து கிளாம்பாக்கத் திற்கும் 4 மணி நேரத்திற் குள், மூன்று மாநகர் போக்கு வரத்து கழக பேருந்துகள் வரை பயணம் செய்து தாங்கள் செல்லும் இடத்தை  விரைவாக அடையும் வகை யில் இந்த திட்டம் மார்ச் 1 முதல் செயல்படுத்தப்பட உள்ளது.