districts

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி புறநகர் மாவட்ட 23 ஆவது மாநாடு செந்தொண்டர் பேரணியுடன் தொடங்கியது

திருச்சிராப்பள்ளி, ஜன.2 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் திருச்சி புறநகர் மாவட்ட 23  ஆவது மாநாடு ஞாயிறன்று மணப்பா றையில் செந்தொண்டர் பேரணியுடன் தொடங்கியது. பேரணியை மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிதம்பரம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.  பேரணியில் புறநகர் மாவட்ட செயலாளர் ஜெயசீலன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பழனிச் சாமி, நடராஜன், சுப்பிரமணியன், நல்லுசாமி, மல்லிகா மற்றும் கட்சி  நிர்வாகிகள், உறுப்பினர்கள், மாநாட்டு பிரதிநிதிகள், வெகுஜன அரங்கத்தினர் ஏராளமானோர் கலந்து  கொண்டனர். மணப்பாறை அகிலாண்டேஸ்வரி திருமண மண்டபத்தில் தோழர் கே. வரதராஜன் நினைவரங்கத்தில் மாநாடு தொடங்கியது.

மாநாட்டை யொட்டி தோழர் மாணிக்கம் நுழைவு வாயில் அமைக்கப்பட்டிருந்தது. சூளியாப்பட்டி தோழர் தங்கராஜ் நினைவு கொடிமரத்தை மாநில செயற் குழு உறுப்பினர் லாசர், முசிறி தோழர் ராஜா நினைவு கொடியை மாநில செயற்குழு உறுப்பினர் பெ. சண்முகம், முசிறி தோழர் ராஜா நினைவு ஜோதியை மாவட்டக்குழு சுப்பிரமணியன், துவாக்குடி தங்க வேல், திருவெறும்பூர் சுலைமான் நினைவு ஜோதியை மாவட்ட செயற் குழு உறுப்பினர் சிதம்பரம், மண்ணச் சநல்லூர் தோழர்கள் முருகேசன், அருணாசலம், சேதுராமன் நினைவு  ஜோதியை மாவட்டக்குழு உறுப்பி னர் சம்பத், முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் தோழர் தங்கவேல் நினைவு ஜோதியை மாவட்ட செயற் குழு உறுப்பினர் கே.வி.எஸ். இந்து ராஜ் ஆகியோர் பெற்றுக் கொண்ட னர்.  மாநாட்டு கொடியை மூத்த தோழர்  நல்லு ஏற்றி வைத்தார். மாநாட்டிற்கு கே.வி.எஸ்.இந்துராஜ்,  ராமநாதன், யமுனாதேவி ஆகியோர் தலைமை வகித்தனர்.

அஞ்சலி தீர்மானத்தை மாவட்ட செயற்குழு உறுப்பினர் சந்தி ரன் வாசித்தார். வரவேற்புக்குழு தலைவர் ராஜகோபால் வரவேற் றார். மாநாட்டை மாநில செயற்குழு உறுப்பினர் பெ.சண்முகம் தொடங்கி வைத்து பேசினார். வேலை அறிக் கையை புறநகர் மாவட்டச் செயலா ளர் ஜெயசீலன் வாசித்தார். நிதி நிலை  அறிக்கையை மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிவராஜ் சமர்ப்பித்தார். மாநாட்டில் கால்நடைகளை தாக்கும் கோமாரி நோயை கட்டுப் படுத்த கிராமங்கள் தோறும் மருத்துவ  முகாம்கள் அமைத்து தடுப்பு நட வடிக்கைகள் எடுக்க வேண்டும். தொடர் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் மற்றும் விவசாய தொழிலாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வலியு றுத்தி ஜன.11 ஆம் தேதி வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் முன் காத்தி ருப்பு போராட்டம் நடத்துவது. காவிரி  - குண்டாறு திட்டத்தை மருங்காபுரி ஒன்றியம் வழியாக நிறைவேற்ற வேண்டும்.  மணப்பாறை, மருங்காபுரி தாலு காவில் அரசு கலைக்கல்லூரி தொ டங்க வேண்டும்.

பசு மற்றும் எருமை  பால் லிட்டர் ஒன்றுக்கு தற்போது உள்ள விலையைவிட கூடுதலாக ரூ.10 வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. பின்னர் காவிரி படுகை விவசாய தொழிலாளர்கள் வீர காவியம் காணொலியை மாநில  செயற்குழு உறுப்பினர் பெ.சண்முகம்  வெளியிட்டார்.  மாநாட்டின் இரண்டாவது நாளான  ஜன.3 (திங்கட்கிழமை) தீர்மானங் கள், புதிய மாவட்டக்குழு தேர்வு, மாநில மாநாட்டு பிரதிநிதிகள் தேர்வு  நடைபெறுகிறது. மாநில செயற்குழு  உறுப்பினர் லாசர் நிறைவுரையாற்று கிறார்.  முசிறியிலிருந்து வந்த ஜோதி திருச்சி மாவட்டம் முசிறியி லிருந்து மணப்பாறையில் நடக்க விருக்கும் புறநகர் 23 ஆவது மாவட்ட  மாநாட்டிற்கு செல்லும் ஜோதி மற்றும் கொடி பயணம் நிகழ்ச்சி நடை பெற்றது. சிபிஎம் முசிறி ஒன்றிய  செயலாளர் நல்லுசாமி தலைமையில்  கொடி அனுப்பி வைத்தல் மற்றும் மறைந்த நிர்வாகி ராஜா நினைவு ஜோதி வழியனுப்பும் நிகழ்வு நடை பெற்றது. ஒன்றிய செயலாளர் நல்லுசாமி கொடியை வழங்க, ஒன்றிய குழு உறுப்பினர் முருகானந்தம் பெற்றுக் கொண்டார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமநாதன், மறைந்த நிர்வாகி ராஜா நினைவு ஜோதியை வழங்க, ஒன்றியக் குழு உறுப்பினர் சுப்பிரமணி பெற்றுக் கொண்டார். ஒன்றிய குழு உறுப்பினர்கள் பலர் ஜோதி மற்றும் கொடி பயணத்தை வழியனுப்பி வைத்தனர்.