குமுளி, பிப்.16- பெரியார் புலிகள் காப்பகத்தின் நான்காவது கணக்கெடுப்பில் 231 வகையான பறவைகள் கண்டறியப்பட்டுள்ளன. சுமார் 100 பறவை ஆர்வலர்கள் பங்கேற்ற இந்தக் கணக்கெடுப்பு ஜனவரி 26-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. இவற்றில் அழிந்து வரும் 14 இனங்கள், மேற்குத் தொடர்ச்சி மலையின் 20 உள்ளூர் இனங்கள், முந்தைய ஆண்டுகளின் கணக்கெடுப்பில் பதிவு செய்யப்படாத 11 இனங்களும் அடங்கும். இதற்கு முன்னர் 2008, 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் விரிவான பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. பெரியாறு, தேக்கடி, வல்லக்கடவு, அழுதா மற்றும் பம்பை வனச்சரகங்களில் உள்ள 30 பகுதிகளுக்கு பறவைக் கண்காணிப்பாளர்கள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டிருந்தனர். கடல் மட்டத்திலிருந்து 150 முதல் 2000 மீட்டர் உயரத்தில் உள்ள காடுகள், புல்வெளிகள் மற்றும் நெல் வயல்களில் இந்தக் கணக்கெடுப்பு நடைபெற்றது.
மரப் புறா, உப்பங்குயில், பெரிய பெக்குயில், காட்டுக் காககம், கிரேட் ஹாரியர், பெரிய ஃபால்கன், லெசர் ஓஸ்ப்ரே, பெஸ் ராப்டார், செம்பருத்தி மரங்கொத்தி, வெள்ளை வயிறு கொண்ட சோழகிலி, வடக்கு சில்சிலுபன், காஷ்மீரி பட்டாம்பூச்சி மற்றும் மஞ்சள்-வயிற்றுப் புறா ஆகியவை குறிப்பிடத்தக்கவை. வடமேற்கு இமயமலைப் பகுதியில் இனப்பெருக்கம் செய்து, தென்னிந்தியா மற்றும் இலங்கையின் உயரமான மலைக் காடுகளில் குளிர்காலத்தைக் கழிக்கும் காஷ்மீரி வண்ணத்துப்பூச்சியின் கண்டுபிடிப்பு இந்தாண்டு கணக்கெடுப்பின் சிறப்பம்சமாகும். பெரியாறு புலிகள் காப்பகத்தில் வலசைப் பறவைகளின் எண்ணிக்கை பதிவு செய்யப்படுவது இதுவே முதல் முறை. நூறு வருட இடைவெளிக்குப் பிறகு மஞ்சவரியன் புறாவை கண்டறியப்பட்டுள்ளது தலைமை வனப் பாதுகாவலர்-மற்றும் பி.பி.பிரமோத் வழிகாட்டுதலின்படி, பெரியார் புலிகள் சரணாலய கிழக்குப் பிரிவு துணை இயக்குநர் டாக்டர். பாட்டீல் சுயோக் சுபாஷ் ராவ், உதவி கள இயக்குநர் பி.ஜே.சுஹைப், பாதுகாப்பு உயிரியலாளர்கள் அனூப் விஜயகுமார், ரமேஷ் பாபு பறவைக் கண்காணிப்பாளர்கள் பிரேம்சந்த் ஆகியோர் இதில் பங்ககேற்றனர். இந்தக் குழுவிற்கு ரகுவரன், அஹமது உமர், டாக்டர். பி.ஓ.சமீர் தலைமை வகித்தனர்.