districts

img

20 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெறும் வகையில் விருதுநகர்-சாத்தூர் சாலையில் தொழிற்பூங்கா பணிகள் துவக்கம்

விருதுநகர், ஜூலை 14-

    விருதுநகர் சாத்தூர் 4 வழிச்  சாலையின் அருகே இ.குமாரலிங் கபுரத்தில் 1052 ஏக்கரில் தொழில் பூங்கா அமைக்கும் பணி துவங்கி யுள்ளது. இதன் மூலம் விருதுநகர் சாத்தூர் பகுதியைச் சேர்ந்த சுமார்  20 ஆயிரம் வேலை வாய்ப்பு களைப் பெறுவார்கள் என கூறப் படுகிறது.

    விருதுநகர்-சாத்தூர் செல்லும் 4 வழிச் சாலையின் அருகே உள் ளது இ.குமாரலிங்கபுரம். இங்கு  1052 ஏக்கரில் நிலம் கையகப்படுத் தப்பட்டுள்ளது. ஒன்றிய, மாநில அரசுகளின் சார்பில் தொழில் பூங்கா அமைக்கும் பணி துவங்கி யுள்ளது. முதற்கட்டமாக மண் பரி சோதனைகள் மேற்கொள்ளப்பட் டுள்ளது.

    இதையடுத்து, இங்கு சாலை  அமைக்கும் பணி தொடங்கப் பட்டுள்ளது. சிப்காட் பகுதிக்குள்  கனரக வாகனங்கள் எளிதில் சென்று வரும் வகையில் ரூ.26.50  கோடியில் தரமான சாலை அமைக்  கப்பட உள்ளது. இப்பணியை 4 வழிச்சாலை நிர்வாகம் செய்ய உள்ளது.

   மேலும், பல கி.மீ தூரத்திற்கு சிப்காட் நிர்வாகம் சார்பில் சாலை அமைக்கும் பணிகளும் நடைபெற உள்ளது. இதையடுத்து, சிப்காட்  வளாகத்திற்குள் உள்ள ஆலை களுக்கு தங்கு தடையின்றி  மின்சா ரம் கிடைக்கும் வகையில் துணை மின் நிலையம் நிறுவப்பட உள் ளது.

   இதேபோல், இங்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க வும் 24 மணிநேரமும் குடிநீர் கிடைத்  திடும் வகையில்   பல கோடி ரூபாய் செலவில் தனியாக தாமிரபரணி தண்ணீர் வரும் வகையில் திட்டமி டப்பட்டுள்ளது.

    மேலும், தொழிலாளர்கள் தங்க ளது குடும்பங்களுடன் தங்குவ தற்கு குடியிருப்புகளும் கட்டப்பட உள்ளன. இதேபகுதியில் சிப்காட் அலுவலகமும் நிறுவப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

   இப்பகுதியில் கோவில்புலி குத்தி, இ.குமாரலிங்கபுரம் ஆகிய கிராமங்கள் உள்ளன. அங்குள்ள பள்ளிகளை சிப்காட் நிர்வாகமே தத்து எடுத்து பராமரிப்பு பணி களை மேற்கொள்ள உள்ளது என கூறப்படுகிறது.

   இங்கு பிரதானமாக ஜவுளி சார்ந்த தொழிற்சாலைகள் அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று  வருகின்றன. எனவே, இந்தியா வில் உள்ள மிகப்பெரிய ஜவுளி  ஆலை  நிறுவன நிர்வாகிகள் பலர்  இப்பகுதியில் ஆலை அமைக்கும் நோக்கில் நேரில் வந்து பார்வை யிட்டுச் செல்கின்றனர்.  

   இங்கு தொழிற்சாலைகள் வரும்பட்சத்தில் விருதுநகர், சாத்  தூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள  கிராமப்பகுதிகளைச் சேர்ந்த ஏராள மானோருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என தொழில் முனை வோர்கள் கூறுகின்றனர்.

    இதுகுறித்து பட்டாசு-தீப் பெட்டி தொழிலாளர் சங்கத்தின் ( சிஐ டியு) விருதுநகர் மாவட்டச் செயலா ளர் எம்.சி.பாண்டியன் கூறுகை யில், விருதுநகர், சாத்தூர் ஒன்றிய பகுதிகளில் பெரும்பாலும் வானம் பார்த்த பூமியாகவே உள்ளது.  மழை பெய்யாத காலத்தில் கிராம  மக்கள் பட்டாசுத் தொழிலை நம்  பியே உள்ளனர். ஒப்பந்தமுறை யில் குறைந்த கூலிக்கு வேலை  வாங்கப்படுகின்றன. இப்பகுதியில் சிப்காட்டில் தொழிற்சாலைகள் பல துவங்கும்பட்சத்தில் சுமார் 15 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாக 5 ஆயிரம் பேருக் கும் வேலை வாய்ப்பு கிடைக்கும் என தெரிவித்தார்.

    இப்பகுதியில் தமிழ்நாடு அரசு  சார்பில் மேலும் 500 ஏக்கர் நிலம்  கையகப்படுத்தும் பணி நடை பெற்று வருகிறது. எனவே, விருது நகர், சாத்தூர் பகுதியானது பொரு ளாதார ரீதியாக மிகப்பெரிய வளர்ச்சியை அடையும் எனவும் பொருளதார வல்லுநர்கள் தெரி விக்கின்றனர்.

   இந்தநிலையில், சிப்காட் பகு திக்குள் தரமான சாலை அமைய உள்ள பகுதியை விருதுநகர் மாவட்ட  ஆட்சியர் ஜெயசீலன் ஆய்வு செய்  தார். அப்போது நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளர் பாக்கி யலட்சுமி, உதவி பொறியாளர் முத்துச்சாமி, சிப்காட்-இளநிலை பொறியாளர் மாரிமுத்து உள் ளிட்டோர் உடனிருந்தனர்.