இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர், தமிழகத்தில் ஐந்து முறை முதலமைச்சராக இருந்த முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி பெய ரால் கலைஞர் நற்பணி மன்றம் திருவாரூரில் கடந்த 20 ஆண்டுகளாக செயல் பட்டு வருகிறது. அதன் தலைவராக எஸ்.என்.அசோகன் இருந்து வருகிறார். திருவாரூர் நகராட்சியில் 4 வது முறையாக தேர்வு செய்யப்பட்டு கவுன்சி லராக சுற்றிச் சுழன்று பணியாற்றி வருகிறார். திருவாரூர் நகராட்சியின் அன்றைய 18ஆவது வார்டில் 3 முறையும் மற்றும் 16ஆவது வார்டில் தற்போதும் மக்களின் ஏகோபித்த ஆதரவால் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறார். திமுக-வின் முன்னணி தலைவரான இவரது எளிமையும் பதவிக ளுக்கு ஆசைப்படாத அர்ப்பணிப்பு உணர்வும் கட்சி தலைமையிடம் இவ ருக்கென ஒரு தனித்த அடையாளத்தைக் கொண்டுள்ளது. தீக்கதிர் சிறப்பித ழுக்காக அவரைத் தொடர்பு கொண்ட போது, எனது பெற்றோர் உட்பட அனை வருமே திராவிட இயக்க கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு பெரியாரின் சிந்தனை களால் கவரப்பட்டு பொது வாழ்வென்பது மக்களுக்கு பணி செய்யக் கிடைத்த ஒரு வாய்ப்பு என்ற உணர்வோடு செயல்பட்டு வருகிறோம். நம்பிக்கையோடு வரும் மக்களுக்குத் தேவையான உதவிகளை எவ்வித சிரமமும் இல்லாமல் செய்துத் தர வேண்டியது எமது கடமை. அந்த வகை யில் கலைஞர் நற்பணி மன்றம் என்ற பெயரில் 25;; மன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து நற்பணிகளை செய்து வருகிறோம்.
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, பாவேந்தர் பாரதிதாசன், முத்தமிழறிஞர் கலைஞர், பேராசிரியர் க.அன்பழகன், சமூக நீதிக் காவலர் வி.பி.சிங், மறைந்த பத்திரிகையாளர் சின்னக் குத்தூசி ஆகியோரது பிறந்தநாளிலும், நினைவுநாளிலும் மரக் கன்றுகள் நடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளோம். இதனால் எங்கள் பகுதி தற்போது மரங்களால் சூழப்பட்டுள்ளது. அரசின் நலத்திட்டங்கள் மக்களுக்கு சென்றடைவதை நாங்கள் ஆட்சி யில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் உறுதி செய்யும் வகையில் தொடர்ந்து சேவையாற்றி வருகிறோம். இவர்களிடம் சென்றால் நம்முடைய தேவை கள் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையை மக்களிடம் ஏற்படுத்தியுள் ளோம். நான் நகர்மன்ற உறுப்பினராக பணிசெய்ய வாய்ப்பு கிடைத்திருப்பதால் இப்பணி எளிதாக உள்ளது. தற்போது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைவருக்குமான வளர்ச்சி என்ற தாரக மந்திரத்தோடு நடைபெற்று வரும் திராவிட மாடல் ஆட்சியை திருவாரூர் நகர வளர்ச்சிக்கான பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டு அதற்கான நிதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு நடைபெற்று வருகிறது. எனது வார்டிலும் நீர்நிலைகளைப் பராமரிப்பது, அடிப்படை வசதிகளை தரம் உயர்த்துவது போன்ற பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. திரு வாரூருக்கு பல சிறப்புகள் உண்டு. திராவிடமும் ஆன்மீகமும் கலந்த பகுதி யில், கலைஞர் நடைபோட்டு இயக்கம் நடத்திய ஊரில் அவரது பெயரில் செயல்படும் நற்பணி மன்றமும் ஒரு அடையாளமாக மாறியுள்ளது என்றால் அது மிகையல்ல; எங்களின் இவ்வகை நற்பணிகளுக்கு ஊக்க மளித்து உறுதுணையாக உள்ள அனைவரும் நன்றிக்குரியவர்கள் என்று கூறினார். நாமும் அவர்களின் பணிகளுக்கு தீக்கதிரின் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டோம்.