அறந்தாங்கி, ஆக.9-
மணமேல்குடி அருகே கள்ளநோட்டை மாற்ற முயன்ற இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கடலோரப் பகுதிகளான கட்டுமாவடி, மணமேல்குடி, கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், மீமிசல் உள்ளிட்ட பகுதிகளில் சிலர் கள்ள நோட்டுகளை கொடுத்து பொருட்களை வாங்குவதாக மணமேல்குடி காவல் துறை யினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில் ஆய்வாளர் குணசேகரன் அப்பகுதியில் உள்ள டாஸ் மாக் மதுபான கடைகளில் யாரேனும் கள்ள நோட்டை கொடுத்து மதுபானம் வாங்கு கிறார்களா என்று கண்காணிக்குமாறு போலீசாருக்கு உத்தரவிட்டார்.
இந்நிலையில் கடந்த வாரம் மணமேல் குடியில் உள்ள ஒரு மதுபான கடையில் அசேன் முகமது என்பவர் ரூ.500 நோட்டை கொடுத்து மதுபானம் கேட்டுள்ளார். அந்த ரூபாய் நோட்டை பெற்ற கடை ஊழியர்கள், அந்த நோட்டு கள்ளநோட்டு என்பதை கண்ட றிந்து மணமேல்குடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின்பேரில் ஆய்வாளர் குணசேக ரன் சம்பவ இடத்திற்கு சென்று அசேன் முக மதுவிடம் விசாரணை மேற்கொண்டார். அப்போது அசேன் முகமது, தன்னிடம் இந்த ரூபாய் நோட்டை கொடுத்தது ஹுமாயின் என தெரிவித்துள்ளார். உடனே போலீசார் ஹுமாயினை பிடித்து விசாரித்தனர். அதில், அவரிடம் சுமார் ரூ.50 ஆயிரம் மதிப் புடைய 500 ரூபாய் கள்ள நோட்டுகள் இருந் ததை கண்டறிந்தனர்.
இவர்கள் இருவரையும் கைது செய்து, அவர்கள் வைத்திருந்த கள்ளநோட்டை பறி முதல் செய்தனர். கைது செய்யப்பட்ட இரு வரும் அறந்தாங்கி குற்றவியல் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
புதுக்கோட்டை மாவட்ட கடலோரப் பகுதிகளில் கள்ள நோட்டை மாற்றும் கும் பல், நெட்வொர்க் அமைத்து செயல்பட்டு வருவதாக தெரிகிறது. கடந்த சில நாட்க ளுக்கு முன்பு அப்பகுதியைச் சேர்ந்த இசை கலைஞர் ஒருவர், புதுச்சேரியில் இருந்து கள்ளநோட்டை கொண்டு வந்து கட்டு மாவடி பகுதியில் மாற்றியதாக தெரிகிறது. தற்போது அவரையும் போலீசார் தேடி வரு கின்றனர்.
கள்ளநோட்டு புழக்கத்தை கட்டுப் படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், கள்ள நோட்டு மாற்றும் நெட்வொர்க்கை பிடிக்க காவல்துறை யினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருவ தாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.