மயிலாடுதுறை, டிச.27 - 2004 ஆம் ஆண்டு டிச.26 அன்று நிகழ்ந்த ஆழிப்பே ரலையில் மயிலாடுதுறை மாவட்டம் ரங்கம்பாடியில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 320 பேர் உயிரிழந்தனர். அதன் 17 ஆவது ஆண்டு நினைவு நாளையொட்டி தரங்கம்பாடி யில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. மீனவ பஞ்சாயத்தார்கள் தலைமையில் தரங்கம்பாடி மீன் விற்பனை கூடத்தி லிருந்து பூம்புகார் எம்.எல்.ஏ நிவேதாமுருகன் (திமுக.), முன்னாள் எம்எல்ஏ பவுன் ராஜ் (அதிமுக) ஆகியோரது முன்னிலையில் அமைதி ஊர்வலமாக புறப்பட்டு ராஜ வீதி, ராணிவீதி வழியாக காம ராஜர் சாலையில் உள்ள சுனாமி நினைவு இடத்திற்கு வந்தனர். அங்கு சுனாமி நினைவு தூணில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். அதனை தொடர்ந்து அமைதி ஊர்வலம் தரங்கம்பாடியில் பழைய ரயிலடி அருகே உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மலர் வளையம் வைத்து, மெழுகுவர்த்தி ஏற்றி ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர். தரங்கம்பாடி தாலுகா பகுதியில் உள்ள அனைத்து மீனவ கிராமங்களுக்கும் ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட்டு கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. தொ டர்ந்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா, தரங்கம்பாடி பழைய ரயிலடி யில் சுனாமி பேரலையால் இறந்து அடக்கம் செய்யப் பட்ட இடத்திற்கு சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.