மயிலாடுதுறை, ஜூலை 22 - மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியம், மாதானம் அருகேயுள்ள ஆலங் காடு ஊராட்சி, ஏகோஜி மகாராஜபுரம் கிரா மத்தில் குடியிருக்க இடம் கேட்டு, மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் 17 ஆவது நாளான திங்களன்றும் தொடர்ந்து போராட்டம் நடைபெற்றது. கட்சியின் மயிலாடுதுறை மாவட்டச் செய லாளர் பி.சீனிவாசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், ஒன்றியச் செயலாளர்கள், மாவட்டக் குழு உறுப்பினர்கள், ஒன்றியக் குழு உறுப்பினர்கள், கிளை செயலாளர்கள், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், மாதர் சங்க நிர்வாகிகள், குடியிருக்க இடம் கேட்டு போராடும் மக்கள் என 300-க்கும் மேற் பட்டோர் தொடர்ந்து போராட்டத்தில் பங் கேற்று வருகின்றனர்.