districts

img

சிபிஎம் திருவாரூர் ஒன்றியக்குழு அலுவலகம் புலிவலத்தில் தோழர் என்.கோவிந்தராஜன் நினைவகம் திறப்பு விழா

திருவாரூர்,பிப்.10- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் ஒன்றியக்குழு அலுவலகமான தோழர் என்.கோவிந்தராஜன் நினைவகம் திறப்பு விழா புலிவலத்தில் பிப்ரவரி 10 வெள்ளியன்று நடைபெற்றது.  இந்நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் என்.இடும்பையன் தலைமை  வகித்தார். ஒன்றியக்குழு உறுப்பினர் பி.பாலு முன்னிலை வகித்தார். அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் ஒன்றிய அலுவல கத்தினை திறந்து வைத்தார். மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் கொடியேற்றி வைத்தார்.  கல்வெட்டினை மாவட்டச் செயலாளர் ஜி. சுந்தரமூர்த்தி திறந்து வைத்தார். கட்சியின் பெயர் பலகையினை பி.கோமதி திறந்து வைத்தார்.இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.கந்தசாமி,கே.ஜி.ரகுராமன், எம்.கலைமணி,சிஐடியு மாவட்ட தலைவர் கே.என்.அனிபா, கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பி.மாதவன், ஜி.பவுன்ராஜ், எஸ்.சேகர், எஸ்.ரகுபதி, வி.ராஜாங்கம், ஆர்.தியாகராஜன், ஆர்.நாகராஜன், எஸ்.சுந்தரய்யா, ஜே.வானதிபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து புலிவலம் கடை தெருவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி 150 பேர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனர். கட்சியில் இணைந்தவர்களுக்கு அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் செந்துண்டு அணிவித்தார். விழாவில் திருவாரூர் ஒன்றியம் முழுவதிலும் இருந்து ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.