மயிலாடுதுறை, ஜூலை 29 -
மடப்புரம் கிராமத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் ஆக்கூர் அருகேயுள்ள மடப்புரம் ஊராட்சிக்குட் பட்ட பெரியசாவடி குளம் பகுதியில் வசித்து வருபவர் கூலித் தொழிலாளி யான கலைவாணன் (40). இவரது கூரை வீடு வெள்ளியன்று இரவு திடீரென தீப்பற்றி எரிந்தது.
வீடு எரிவதை கண்ட அக்கம்பக்கத்தினர் தீயை அணைக்க முற்பட்ட நிலையில், கலைவாணன் வீட்டி லிருந்த சமையல் எரிவாயு வெடித்து சிதறி, மேலும் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. தகவல் அறிந்த தரங்கம்பாடி தீய ணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மேலும் தீ பரவாமல் அணைத்தனர்.
ஆனால் இந்த விபத்தில் தீயை அணைக்க முயற்சித்த அதே பகுதியை சேர்ந்த ஜெயப்பிரதாப் (40), ஜெயக்குமார் (45), மணிமாறன் (48), ஜெகதீஸ் (27), வினோத்ராஜ் (34), ராஜேஷ் (36), இளைய பெருமாள் (43), மதன் (19), பிரேமா(28), கருணாநிதி(48), சுரேஷ்(40), சரவணன் (43), கலியப்பெருமாள் (68), சுரேஷ்குமார்(19), நடராஜன் (23) உள்ளிட்ட 15 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டது. விபத்தில் காயமடைந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆக்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து செல்லப் பட்டனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக் கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக மயி லாடுதுறை அரசு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டனர். இதில் பலத்த தீக்காயமடைந்த கருணா நிதி (48), சுரேஷ்(40), சரவணன்(43) ஆகிய மூவரும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப் பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து செம்பனார்கோயில் போலீ சார் வழக்கு பதிந்து தீ விபத்து ஏற்பட்ட தற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்தில் வீட்டிலிருந்த கட்டில், பீரோ, டிவி, வாஷிங் மெஷின், பத்தி ரங்கள், ரேசன் கார்டு, ஆதார் அட்டை, பாத்தி ரங்கள், துணிமணிகள் உள்ளிட்ட அத்தியா வசியப் பொருட்கள் அனைத்தும் தீயில் கருகின.
சம்பவம் குறித்து அறிந்த தரங்கம்பாடி வட்டாட்சியர் சரவணன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு தீ விபத்து குறித்து ஆய்வு செய்தார். பின்னர் தீக்காய மடைந்து சிகிச்சை பெற்று வருபர்களின் உற வினர்களுக்கு ஆறுதல் கூறினார். மயிலாடு துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி சனிக்கிழமை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.