அரியலூர், செப்.10 - திருச்சி மத்திய மண்டலத்தில், ஆகஸ்ட் மாதம் மட்டும் ரேசன் கடத்திய தாக 140 பேர் கைது செய்யப்பட்டுள்ள தாக தமிழக குடிமைப் பொருள் வழங் கல் குற்றப் புலனாய்வுத் துறை டிஜிபி வன்னியப் பெருமாள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “திருச்சி மத்திய மண்டலத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கடத்தி வரப்பட்ட 213 குவிண் டால் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப் பட்டு, இது தொடர்பாக 140 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருச்சி மண்டலத்துக்கு உட்பட்ட அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் ரேசன் அரிசி கடத்தலை தடுக்க, போலீசார் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஆக.13 அன்று அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் வட்டம், சின்னவளையம் மேம்பாலம் அருகே சுமை வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 1,300 கிலோ ரேசன் அரிசியும், ஆக.16 அன்று திருச்சி மாவட்டம் புளியஞ் சோலை பகுதியில் பதுக்கி வைக்கப் பட்ட 1,100 கிலோ ரேசன் அரிசியும், ஆக.22 அன்று திருச்சி லால்குடி பகுதி யில் 1,050 கிலோ ரேசன் அரிசியும் பறி முதல் செய்யப்பட்டு வழக்குப் பதியப் பட்டுள்ளது. ஆக.26 அன்று திருச்சி மணப்பாறை பகுதியில் ஒரு தனியார் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,000 கிலோ ரேசன் அரிசியும், ஆக.30 அன்று புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக் குடி, விடுதி சாலையில் நான்கு சக்கர வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 1,250 கிலோ ரேசன் அரிசியும், செப். 4 அன்று திருச்சி மண்ணச்சநல்லூர் பகுதியில் தனியார் குடோனில் பதுக்கி வைக்கப் பட்டிருந்த 4,000 கிலோ ரேசன் அரிசி யும் கைப்பற்றப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன திருச்சி மண்டலத்தில் கடந்த மாதத் தில் 138 வழக்குகள் பதிவு செய்யப் பட்டு, 213 குவிண்டால் ரேசன் அரிசி கைப்பற்றப்பட்டது. இதுவரை, கடத்த லில் ஈடுபட்ட 140 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். மேலும் கடத்தலுக்கு பயன் படுத்திய ஏழு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. குடிமை பொருள் கடத்தல் தொடர் பான தகவல்களை பொதுமக்கள் தெரி விக்கும் பொருட்டு கட்டணம் இல்லா தொலைபேசி 18005995950 என்ற எண் தலைமையகத்தில் செயல்பட்டு வரு கிறது. இதனை முறையாக பயன்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், அனைத்து கிராமங்கள் மற்றும் நக ரங்களிலும் சுவரொட்டிகள் மூலம் விளம் பரப் படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் வரும் புகார்களை கண் காணித்து நடவடிக்கை எடுக்கும் பொருட்டு தலைமையகத்தில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை இயங்கி வரு கிறது. கடத்தல் தொடர்பாக கிடைக்கும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டு, வாரந்தோறும் அரசுக்கு ஆய்வறிக்கை அனுப்பி வைக்கப்படுகிறது. திருச்சி மண்டலத்துக்கு உட்பட்ட பொதுமக்கள் அனைவரும் மேற்கண்ட கட்டணமில்லா தொலைபேசி எண் மூலம் புகார் தெரிவிக்கலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.