தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஆர்.டி.பி கல்வியியல் கல்லூரி சார்பில் 12, 13, 14 ஆவது பட்டமளிப்பு விழா நடந்தது. ஆர்.டி.பி கல்லூரி கலையரங்கில் நடந்த நிகழ்ச்சியில் முன்னதாக கல்வியியல் கல்லூரி முதல்வர் முருகன் வரவேற்றார். ஆர்.டி.பி கல்விக் குழுமத்தின் தலைவர் தாவூத் பாட்சா பேசினார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பாபநாசம் எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லா 307 பேருக்கு பட்டங்களை வழங்கினார். துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.