districts

போலி ஆவணங்கள் மூலம் நெல் கொள்முதல் நிலையத்தில் ரூ.11.10 லட்சம் முறைகேடு

3 பேர் பணியிடை நீக்கம் தஞ்சாவூர், ஜூன் 14- பட்டுக்கோட்டை அருகே நேரடி நெல்  கொள்முதல் நிலையத்தில் போலி ஆவணங் கள் மூலம் ரூ.11.10 லட்சம் முறைகேடு  செய்ததாக, கொள்முதல் பணியாளர்கள்  மூவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே மண்ணங்காடு கிராமத்தில் தமிழ்நாடு  நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பில், விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்வ தற்காக தற்காலிக நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த கொள்முதல் நிலையத்தில் கடந்த  மார்ச் மாதம் விவசாயிகளிடமிருந்து நெல்  கொள்முதல் செய்யப்பட்டு, சேமிப்பு கிடங் குக்கு நெல் மூட்டைகள் அனுப்பப்பட்டு வந்தன. இந்த நெல் கொள்முதல் நிலையத் தில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட ரூ.11 லட்சத்து 10 ஆயிரத்து 720  மதிப்பிலான 1,240 நெல் மூட்டைகள் சேமிப்பு  கிடங்குக்கு வரவில்லை. மேலும், கொள்முதல் முடிந்ததும் அங்கு  பணியாற்றிய பட்டியல் எழுத்தர் எம்.பாலு (38), கொள்முதல் உதவியாளர் ஆர்.தியாக ராஜன் (40) ஆகியோர் கொள்முதல் தொடர் பான கணக்குகளை நிர்வாகத்திடம் முறை யாக வழங்காமல் இருந்துள்ளனர். கடந்த மே மாதம் கொள்முதல் நிலையத் தில் எவ்வளவு நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டன. கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு உரிய தொகை வங்கி மூலம் எவ்வளவு பட்டுவாடா செய்யப்பட்டது என்பது  குறித்து தணிக்கை செய்யப்பட்டது. அதில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.11.10 லட்சம்  முறைகேடு செய்யப்பட்டுள்ளது தெரிய வந்தது.  இதையடுத்து கொள்முதல் நிலையத்தில் பணியாற்றிய பட்டியல் எழுத்தர் எம்.பாலு, கொள்முதல் உதவியாளர் ஆர்.தியாகராஜன்  ஆகியோரும், கொள்முதல் நிலையப் பணி களை முறையாக கண்காணிக்க தவறிய கொள் முதல் அலுவலர் பி.தங்கையன் (59) ஆகிய  மூவரையும் தஞ்சாவூர் மாவட்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் முதுநிலை  மண்டல மேலாளர் ஆர்.ஸ்ரீமோகனா பணி யிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும், அரசின் தொகை ரூ.11.10 லட்சத்தை மோசடி செய்ததாகவும், அதை மீட்டுத் தருமாறு பட்டுக்கோட்டை கோட்ட மேலாளர் லதா, பட்டுக்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் ஜூன் 11 ஆம் தேதி புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில்  காவல்துறையினர் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட தமிழ் நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் முது நிலை மண்டல மேலாளர் ஆர்.ஸ்ரீமோகனா கூறுகையில், “மண்ணங்காடு கொள்முதல் நிலையத்தில் பணியாற்றும் சுமை தூக்குபவர் களின் உதவியோடு, போலி ஆவணங்கள் மூலம் நெல் பிடித்தம் செய்ததாக, ரூ.11.10  லட்சம் வங்கி மூலம் பட்டுவாடா செய்யப்பட்டு உள்ளது.  இந்த தொகையை பட்டியல் எழுத்தர் எடுத்து முறைகேடு செய்துள்ளார். இந்த முறைகேட்டுக்கு கொள்முதல் உதவி யாளரும் துணை புரிந்துள்ளார். எனவே இவர் களை பணியிடை நீக்கம் செய்வதோடு இல்லாமல், இரண்டு ஆண்டுகளுக்கு கருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். மண்ணங்காடு கொள்முதல் நிலையத் தின் பணிகளை தினமும் கண்காணிக்காமல், மெத்தனமாக செயல்பட்ட கொள்முதல் அலு வலர் தங்கையனும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்” என்றார்.