புதுக்கோட்டை, ஜூன் 16-
தொடர்ச்சியாக 11 ஆண்டுகளாக 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்றுவரும் புதுக்கோட்டை மாவட்டம் மதியநல்லூர் அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு புதுக்கோட்டை வாசகர் பேரவை பாராட்டுத் தெரிவித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவா சலை அடுத்த மதியநல்லூர் அரசு உயர்நிலைப் பள்ளி கடந்த 11 ஆண்டுகளாக 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்பில் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்று வருகிறது. இத்தகைய தேர்ச்சிக்கு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் தலைமை அசிரியர் மற்றும் ஆசிரி யர்களைப் பாராட்டி புதுக்கோட்டை வாசகர் பேரவை சார்பில் மரியாதை செய்யப்பட்டது.
நிகழ்வில் வாசகர் பேரவை செயலாளர் சா.விஸ்வநாதன், பள்ளி தலைமை ஆசிரி யர் அ.தர்மசேகர், சத்தியராம் மு.ராமுக் கண்ணு, ரோட்டரி மேனாள் ஆளுனர் அ.லெ. சொக்கலிங்கம், மரம் நண்பர்களின் செயலா ளர் பழ.கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்ற னர். மேலும் பள்ளி அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவிகள் ச.சங்கீதா, இரா.சரண்யா, பா. மதுமிதா ஆகியோருக்கும் வாசகர் பேரவை சார்பில் பரிசு வழங்கி பாராட்டப்பட்டனர். உதவித் தலைமை ஆசிரியர் க.பாலசந்திரன் நன்றி கூறினார்.