districts

img

மயிலாடுதுறை கொத்தங்குடியில் 100 ஏக்கர் நாசம்

மயிலாடுதுறை மாவட்டம்,தரங்கம்பாடி வட்டம், கொத்தங்குடி ஊராட்சிக்குட்பட்ட வேலம்புதுக்குடி, ஐவேலி, கீழ்க்கரை,செருக்குடி ஆகிய பகுதிகளில் சுமார்  100 ஏக்கருக்கும் மேல் சம்பா நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டு  அறுவடைக்குத் தயாராக இருந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த தொடர் கனமழையால் ஒட்டு மொத்த நெற்பயிரும்  சாய்ந்து மழைநீரில் மூழ்கி அழுகிப் போயுள்ளது. பயிர்கள் அழுகிய நிலையிலும் முளைத்துள்ளன. தங்களுக்கு நிவாரணம் வழங்க ஆட்சியர் நடவடிக்கை எடுக்கவேண்டுமென வலியுறுத்துகின்றனர் விவசாயிகள்.