districts

வெறிநாய் கடித்து 10 பேர் காயம்

அரியலூர், ஆக.9-

    அரியலூர் நகர் பகுதிகளில் அதிகளவில் தெரு நாய் கள் சுற்றி வருகின்றன. இந்நிலையில், பங்களா சாலையில்  நின்று கொண்டிருந்த முத்து, மதி ஆகியோரை வெறி நாய் ஒன்று கடித்தது. பின்னர் காவலர் உணவகம் முன்பு  பேருந்துக்காக காத்திருந்த பயணிகள் உள்பட 10 பேரை  கடித்துள்ளது. இதையடுத்து காயமடைந்த அனைவரும் அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற னர். தெருநாய்களால் அச்சுறுத்தல் ஏற்படுவதாக நகரவாசி கள், நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரி வித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.