அரியலூர், அக்.8- அரியலூரி லிருந்து கும்பகோ ணம் நோக்கி சென்ற அரசுப் பேருந்தும் லாரி யும் மோதிக்கொண்ட விபத்தில் 10 பேர் காயமடைந்தனர். அரியலூரில் இருந்து சுந்தரேசபுரம், தா.பழூர் வழியாக கும்பகோணத்துக்குக்கு அரசுப் பேருந்து ஒன்று 30 பயணிகளுடன் ஞாயிறு (அக்.8) காலை சென்றது. இந்தப் பேருந்து சுந்தரேசபுரம் கிராம வளைவில் திரும்பிய போது, சிமென்ட் ஆலைக்கு நிலக்கரி ஏற்றிக்கொண்டு எதிரே வந்த லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானது. அப்போது, பேருந்து சாலையை விட்டு கீழே இறங்கி அங்கே இருந்த டிரான்ஸ்பாஃர்மரில் மோதி நின்றது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த அரியலூர் மாவட்டம் கூழாட்டு குப்பம் கிராமத்தைச் சேர்ந்த துரை சாமி(56), அரியலூர் மேலத்தெரு சுரேஷ் மனைவி பாக்கியா (23), மகன் தரணிதரன்(10 மாதம்), மங்கையர்கரசி(40), சூர்யா(40), ரெங்கசமுத்திரம் தனம்(55) உட்பட 10 பேர் காயமடைந்தனர்.