“ஊட்டச்சத்தை உறுதி செய்” திட்டம், குழந்தைகளைக் காக்கும் மகத்தான திட்டமாகும். தாயுள்ளம் கொண்ட முதல மைச்சருக்கு இத்திட்டத்தின் மூலம் பயனடைந்த தஞ்சா வூர் மாவட்ட தாய்மார்கள் நெஞ்சார்ந்த நன்றி தெரி வித்தனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 15.11.2024 அன்று அரியலூர் மாவட்டத்தில், தமிழ்நாட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடுகளை களையும் நோக்குடன் செயல் படுத்தப்பட்டு வரும் முன் னோடி திட்டமான “ஊட்டச் சத்தை உறுதி செய்” திட்டத்தின் இரண்டாம் கட்டத்தினை 22 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம் தீவிர ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களாக கண்ட றியப்பட்ட குழந்தைகளில் சுமார் 77.3 சதவீத குழந்தை கள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பிறந்தது முதல் 6 மாதம் வரை உள்ள குழந்தைக ளுக்கு தாய்ப்பால் மட்டுமே உணவாக வழங்கப்பட வேண்டும். ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளின் தாய்மார்களின் உடல்நலம் பேணினால் மட்டுமே, குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையினை மேம்படுத்த முடியும். எனவே தான், தற் போது 76,705 ஊட்டச்சத்து குறைபாடு உள்ளதாக கண்ட றியப்பட்டுள்ள 0-6 மாத குழந்தைகளின் பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச் சத்து பெட்டகங்களை அவர்க ளின் வீட்டிற்கே சென்று வழங்குவதோடு மட்டு மல்லாமல், குழந்தைகளின் நிலையைத் தொடர்ந்து கண்காணிக்கும் “ஊட்டச் சத்தை உறுதி செய்” திட்டத்தின் இரண்டாம் கட்டம் 22 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்தப்படும். இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் கூறு கையில், அரியலூர் மாவட்டம், வாரணவாசி குழந்தைகள் மையத்தில் “ஊட்டச்சத்தை உறுதி செய்” திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை முதல மைச்சர் தொடங்கி வைத்தார். இப்பெட்டகமானது, நெய், பேரிச்சம்பழம், ஊட்டச்சத்து மாவு, இரும்புச்சத்து டானிக், பருத்தி துண்டு (டவல்), பிளாஸ்டிக் பக்கெட் மற்றும் கப் ஆகிய பொருட்களை கொண்டது. தஞ்சாவூர் மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களிலும் கடுமையான மற்றும் மித மான ஊட்டச்சத்து குறைபாடு உள்ள 0-6 மாத குழந்தைக ளின் 1,777 பாலுட்டும் தாய்மார்களுக்கு தஞ்சாவூர் மாவட்டத்தில் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது என்று தெரிவித்தார். இதுகுறித்து தஞ்சாவூர் நகரம் வட்டாரம், முள்ளுக்கார தெரு அங்கன்வாடி மையத் தின் பயனாளி ராகவி என்ற குழந்தையின் தாயார் தனலெட்சுமி கூறுகையில், ஊட்டச்சத்து பெட்டகத்தில் உள்ள பொருட்கள் பேரீச்சம் பழம், பூச்சி நீக்க மாத்திரை, நெய், இரும்பு சத்து டானிக், புரதச்சத்து மாவு ஆகியவை பாலூட்டும் தாய்க்கு போது மான ஊட்டச்சத்தை பூர்த்தி செய்யும் வகையிலும் தாய்ப் பால் சுரப்பை அதிகரிக்கும் வகையிலும் இருக்கிறது. மேலும், தாய், குழந்தை க்கு தாய்ப்பால் கொடுத்து குழந்தையின் உடல் எடை அதிகரிக்க செய்ய ஊட்டச் சத்தை உறுதி செய் என்ற திட்டம் சிறப்பான திட்டமாகும். இந்த திட்டம் தந்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்தார். இவ்வாறு ஊட்டச்சத்தை உறுதிசெய் திட்டம் தஞ்சாவூர் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வரு கிறது. தொகுப்பு திரு.ரெ.மதியழகன், எம்.காம், பி.எல்., செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், தஞ்சாவூர் மாவட்டம்