திருவாரூர் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழக (LIC) நிறுவனத்தில் 15 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி சங்க பணியிலும் தன்னை முழுவதுமாக இணைத்துக்கொண்ட இராஜேந்திரனின் பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது. கிளை பொறுப்பாளர்கள் சித்தார்த்தன், கமலவடிவேலு முன்னிலை வகித்தனர். தஞ்சை கோட்ட சங்க தலைவர் செல்வராஜ், பொதுச்செயலாளர் சேதுராமன், இணைச்செயலாளர் செந்தில்குமார் மற்றும் கிளை உறுப்பினர்கள், முகவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.