புதுக்கோட்டை, ஜூலை 18 -
‘தமிழ்நாடு நாள் விழா’ கொண்டாடும் வகை யில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தி லிருந்து மாவட்ட ஆட்சியரகம் வரை நடைபெற்ற பேரணியை மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும், மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள புகைப்படக் கண்காட்சி யினை திறந்து வைத்து பார்வையிட்டார். பின்னர் தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் நடத்தப்பட்ட கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற 24 மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் ரூ.1,76,000 மதிப்பிலான காசோலைகளை ஆட்சியர் வழங்கினார்.
இந்த பேரணியில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை.முத்துராஜா மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.