கரூர்.செப். 5 கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் புதனன்று நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ‘‘உயர்வுக்குப் படி 2024’’ முகாம் முன் திட்டமிடல் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மீ.தங்க வேல் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, தமிழ்நாடு அரசு தமிழக மாணவர்களின் முன்னேற் றத்திற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் பள்ளிக் கல்வித் துறையின் மூலம் கரூர் மாவட்டத்தில் 2022-23 மற்றும் 2023-24-ஆம் கல்வி யாண்டில் உயர்கல்வி தொடராத 12-ஆம் வகுப்பு மாணவர்கள் உயர் கல்வி தொடர்வதற்கு ஏதுவாக நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ‘‘உயர்வு க்குப் படி 2024’’ முகாம் கரூர் மற்றும் குளித்தலை ஆகிய இடங்களில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இம்முகாமின் நோக்கம் உயர் கல்வி தொடராத மாணாக்கர்களை உயர்கல்வியில் சேர்ந்து எதிர் காலத்தில் அவர்கள் பயின்ற துறை யில் சிறந்த வல்லுநராக உருவாக்கு வதே ஆகும். மேலும், உயர்கல்வியில் சேராத மாணவர்களை மேற்படிப்பில் சேர்வதற்கு பள்ளிக் கல்வித்துறை யுடன் இணைந்து அனைத்து அர சுத்துறைகளும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார். கரூர் வருவாய் வட்டத்தில் ‘‘உயர்வுக்குப் படி 2024’’ முகாம்கள் வருகின்ற செப்டம்பர் 9 மற்றும் செப்டம்பர் 19 ஆகிய தேதிகளிலும், குளித்தலை வருவாய் வட்டத்தில் செப்டம்பர் 13 மற்றும் செப்டம்பர் 24 ஆகிய தேதிகளிலும் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் மாவட்ட வரு வாய் அலுவலர் ம.கண்ணன், மகளிர் திட்ட இயக்குநர் சீனிவாசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) யுரேகா, வருவாய் கோட் டாட்சியர்கள் முகமதுபைசல் (கரூர்), தனலெட்சுமி (குளித்தலை), அனைத்து அரசுத்துறை அலுவலர்கள், கல்லூரி முதல்வர்கள், அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.