districts

ஒன்றிய மோடி அரசை கண்டித்து இன்று திருச்சியில் ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, பிப்.7- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் ஆர்.ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநில உரி மைகள் மீதான தாக்குதல், எதிர்க்கட்சி ஆளும் மாநி லங்களை நிதி பகிர்வில் வஞ்சிப்பது, இடி, ஐ.டி  போன்ற ஒன்றிய அமைப்பு கள் மூலம் எதிர்க்கட்சி தலை வர்களை பழிவாங்குவது, அத்துமீறும் ஆளுநரையும், அடாவடி செய்யும் மோடி அரசையும் கண்டித்து  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வியாழன் (பிப்.8) அன்று காலை 10 மணியளவில் சிந்தாமணி அண்ணா சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெறுகிறது.  ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் மாநகர் மாவட்டச் செயலாளர் ஆர்.ராஜா தலைமை வகிக்கிறார். சிபிஎம் புறநகர் மாவட்டச் செயலாளர் எம்.ஜெயசீலன் முன்னிலை வகிக்கிறார். ஆர்ப்பாட்டத்தில் திரா விடர் கழகத் தலைவர் கி. விரமணி, நகர்ப்புற உள் ளாட்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி, சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஸ்ரீதர், மேயர் மு.அன்பழகன் மற்றும்  திமுக, காங்கிரஸ், சிபிஐ,  மதிமுக, விசிக, முஸ்லீம் லீக்,  மமக, திக நிர்வாகிகள் கண்டன உரை ஆற்றுகின்ற னர். இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்தியா கூட்டணியைச் சேர்ந்த நண்பர்கள், தோ ழர்கள் பெருந்திரளாக கலந்து  கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.