districts

img

பரணி வித்யாலயா பள்ளியில் ‘தங்க நட்சத்திர விருது’ வழங்கும் விழா

கரூர், ஜன.28 - கரூர் பரணி வித்யாலயா  சி.பி.எஸ்.இ மேல்நிலைப் பள்ளியில் 15 ஆவது ஆண்டு  விழா மற்றும் தங்க நட்சத்திர  விருது வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு பரணி பார்க் கல்வி நிறுவனங்களின் தாளாளர் எஸ்.மோகன ரெங்கன், செயலர் பத்மாவதி  மோகனரெங்கன் தலைமை  வகித்தனர். ஸ்ரீசங்கர வித்யா லயா சிபிஎஸ்இ பள்ளியின் தாளாளர் அசோக்சங்கர் சிறப்புரையாற்றினார்.  இவ்விழாவில் அரசு  பொதுத் தேர்வு, விளை யாட்டு, இலக்கியம், நடனம்,  பட்டிமன்றம், அறிவியல் ஆராய்ச்சி, யோகா போன்ற  பல்வேறு பிரிவுகளில் சர்வ தேச, தேசிய சாதனைகள் படைத்த 175 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தங்க நட்சத்திர விருது வழங்கப்பட்டது. நீட் மற்றும் ஜே.இ.இ தேர்வுகளில் ஒவ்வொரு வரு டமும் பரணி கல்விக் குழும  மாணவர்கள் தேசிய அள வில் சிறப்பிடம் பிடித்து வரு கின்றனர். ஆந்திர மாநில ஆசிரியர்கள் உதவியுடன் ராஜஸ்தான் பாடப் புத்தகங் களைக் கொண்டு ஜே.இ.இ,  நீட் நுழைவுத் தேர்வுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படு கிறது.  இதன் தொடர்ச்சியாக கடந்தாண்டு நடைபெற்ற ஜே.இ.இ-2023 தேர்வில் சிறப் பிடம் பெற்ற பிரேம்குமார், அபினா மற்றும் நீட்-2023 தேர்வில் சிறப்பிடம் பெற்ற ரவீனா ஆகியோருக்கு தங்க  நட்சத்திர விருது வழங்கப் பட்டது. இதைத் தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் பரணிபார்க் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, பரணி வித்யாலயா சி.பி.எஸ்.இ பள்ளி, எம்.குமார சாமி கல்வியியல் கல்லூரி மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.  பரணி பார்க் கல்விக் குழும முதன்மை முதல்வர்  முனைவர் சி.ராமசுப்ர மணியன், பரணி வித்யா லயா பள்ளி முதல்வர் எஸ். சுதாதேவி, துணை முதல்வர்  ஆர்.பிரியா, ஒருங்கிணைப் பாளர்கள் மற்றும் ஆசிரி யர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.