திருச்சிராப்பள்ளி, டிச.23 - ‘நம் இல்லங்கள் தோறும் தோழர் சங்க ரய்யா’ என்ற முழக்கத்துடன் வெளிவந்த வண்ண காலண்டர் முதல் விற்பனையை தீக்கதிர் திருச்சி பதிப்பு சார்பில், திருச்சி மாவட்டம் வெண்மணி இல்லத்தில் மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கட்டுப் பாட்டுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர் துவங்கி வைத்தார். கட்சியின் திருச்சி மாநகர் மாவட்டக் குழு உறுப்பினரும் மாவட்ட தீக்கதிர் பொறுப் பாளருமான சந்தானம், மக்கள் ஒற்றுமை மேடை மாவட்ட கன்வீனர் பி.சுப்பிரமணி யன் மற்றும் தமுஎகச உறுப்பினர் நாகநாதன் ஆகியோர் தலா ரூ.20 கொடுத்து காலண் டரைப் பெற்றுக் கொண்டனர். இந்தக் காலண் டர் டிசம்பர் 25 வெண்மணி நினைவு தினத்தன்று விற்பனைக்கு கிடைக்கும்.