districts

img

தனியார் ஆக்கிரமித்த புறம்போக்கு நிலத்தை மீட்க பெண்கள் கோரிக்கை

சின்னாளப்பட்டி, ஜூன் 21- திண்டுக்கல் மாவட்டம் நிலக்  கோட்டை தாலுகா ஜம்புத்துரைக் கோட்டை ஊராட்சி ஜெ.ஊத்துப் பட்டியில் உள்ள கருப்பணசாமி கோவில் அருகே சுமார் 25 சென்ட் அரசு புறம் போக்கு நிலத்தை தனியார் ஒருசிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும் அதனை மீட்டு சமுதாயக்கூடம் அங் கன்வாடிமையம் உள்ளிட்ட கிராமநல மேம்பாட்டிற்கு வழங்கக் கோரி கடந்த  பத்து ஆண்டுகளாக பல்வேறு போராட்  டங்கள் நடத்தி வந்தனர். இந்நிலையில் திங்களன்று நூற் றுக்கும் மேற்பட்ட பெண்கள், ஆண்கள் நிலக்கோட்டை வட்டாட்சியர் அலுவல கத்திற்கு கோரிக்கை மனு அளிக்கவந்த னர். மேலும் தாங்கள் கிராம மேம்பாட்  டிற்கு நிலம் இல்லாமல் பல ஆண்டு களாக போராடி வருவதாகவும் இது குறித்து எந்த ஒரு அதிகாரியும் செவி சாய்க்க வில்லை எனவும் இன்று அதி காரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்  காமல் கலைந்து செல்லப் போவதில்லை என கூறி அங்கேயே காத்திருந்தனர். பின்னர் வந்த வவட்டாட்சியர் தனுஷ்  கோடி, கிராம நிர்வாக அலுவலர் உதவி யாளர் மற்றும் வருவாய் ஆய்வாள ரைக் கொண்டு இடத்தை அளந்து ஆய்வு செய்தார். மேலும் அரசு ஆவ ணப்படி நிலம் அனைத்தும் அளந்து சரிபார்த்து ஓரிரு நாட்களில் மீட்கப்பட்டு கிராம மக்களிடம் ஒப்படைக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து பொது மக்கள் அனைவரும் கலைந்து சென்ற னர்.