திண்டுக்கல், மார்ச் 17- நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் ‘இந்தியா’ அணி சார்பில் திண்டுக்கல்லில் போட்டி யிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் ஆர்.சச்சிதானந்தம், கட்சியின் மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அமைச்சரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளருமான ஐ.பெரியசாமியை அவரது இல்லத்தில் சந்தித்தனர்.
சந்திப்புக்குப் பின்னர் செய்தி யாளர்களிடம் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, ‘‘திண்டுக்கல் நாடாளு மன்ற தொகுதியின் வெற்றி உறுதியாகி விட்டது. தமிழ்நாட்டில் அதிக வாக்கு வித்தியாசத்தில் திண்டுக்கல் தொகுதி வெற்றி பெறும். இந்த வெற்றி இந்தியாவிற்கே வழிகாட்டும். திங்களன்று எங்களது கட்சியின் கூட்டம் நடைபெறும். கூட்டத்திற்கு பிறகு தேர்தல் பிரச்சாரம் எப்போது என அறிவிக்கப்படும். முதல் வெற்றியே திண்டுக்கல் சிபிஎம் வேட்பாளர் ஆர்.சச்சிதானந்தம் அதிக வாக்குகள் முன்னி லையில் உள்ளார் என வாக்குகள் எண்ணும் போது காலை 9 மணி நிலவரப்படியே தெரிய வரும்.
பிரச்சாரத்தில் வைக்கக்கூடிய முக்கியக் கோரிக்கை மாநில உரிமை களை மீட்பது தான். மாநிலங்களின் வளங்கள், உரிமைகள் அனைத்தை யும் மீட்பது தான் நம்முடைய போராட்டம். ஜனநாயகம் என்ற போர்வையில் இந்தியாவில் சர்வாதி கார ஆட்சி நடந்து வருகிறது. அதை முறியடிப்பதற்கு ‘இந்தியா’ கூட்டணி என்ற மாபெரும் கூட்டணியை உரு வாக்கி முதல்வர் ஸ்டாலின் தலைமை யில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட இந்த தேர்தலில் களம் காண்கிறோம்.
நிச்சயமாக வெற்றி உறுதி செய்யப்படும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு திண்டுக்கல் தொகுதி ஒதுக்கீடு செய்யப் பட்டது பெருமையாக உள்ளது. மிகப் பெரிய அரசியல் கட்சி; எல்லோருக்கும் எல்லாம் என்கிற பொதுவுடமை அடிப்படையில் செயல்படக்கூடிய கட்சி மார்க்சிஸ்ட் கட்சி. திமுக 1967 ஆம் ஆண்டு ஆட்சி பீடம் ஏறுவதற்கு உறுதுணையாக இருந்த இயக்கம் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி. இன்று வரை அந்த உறவு தொடர்கிறது. கொள்கையில் உறுதியாக இருக்கக்கூடிய கட்சிகள் அனைத்தும் ஒரே அணியில் நிற்கின்றன.
கொள்கை இல்லாத கட்சிகள் வேறு அணியில் உள்ளன. கொள்கையோடு உள்ள எங்களை மக்கள் நிச்சயமாக அங்கீகரிப்பார்கள்” என்று கூறினார். பேட்டியின் போது, மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்திய குழு உறுப்பினர் பெ.சண்முகம், மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் மதுக்கூர் இராமலிங்கம், என்.குணசேகரன், என்.பாண்டி, கே.பாலபாரதி, நகரச் செயலாளர் அரபு முகமது, மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் அஜய், ஆசாத் மற்றும் திமுக நிர்வாகிகள் உட்பட பலர் இருந்தனர்.