திண்டுக்கல், ஆக.23 வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழா கொடியேற்றத்தை முன் னிட்டு பக்தர்கள் வசதிக்காக திண்டுக் கல்லிலிருந்து சிறப்பு ரயில் விட ரயில்வே நிர்வாகம் முன்வரவேண்டும் என்று திண்டுக்கல் மக்களவை உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் வலி யுறுத்தியுள்ளார்.
வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழா வேளாங்கண்ணியில் வருகிற ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதனையடுத்து இந்த திருவிழா 10 நாட்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. தென் மாவட்டங்களில் குறிப்பாக திண்டுக்கல் போன்ற நகரத்தில் அதிக மான கிறிஸ்துவ மக்கள் வசிக்கிறார் கள். திண்டுக்கல்லில் உள்ள கிறிஸ்துவ மக்கள் திருச்சி வரை பயணி கள் ரயிலில் புறப்பட்டுச் சென்று திருச்சியிலிருந்து ரயில் மாறி வேளாங் கண்ணிக்கு செல்லும் ரயிலில் பயணிக்கிற நிலை உள்ளது.
எனவே திண்டுக்கல் கிறிஸ்துவ மக்கள் பயன்பெறும் வகையில் திண்டுக்கல்லில் இருந்து வேளாங் கண்ணிக்கு நேரடியாகச் செல்ல காலை, மாலை இரண்டு வேளையி லும் ரயில்வே நிர்வாகம் சிறப்பு ரயில் இயக்க முன்வர வேண்டும். திண்டுக் கல் மாவட்டத்தில் திண்டுக்கல், பழனி, ஒட்டன்சத்திரம், நிலக்கோட்டை, ஆத்தூர், நத்தம், வேடசந்தூர் ஆகிய 7 சட்டமன்றத் தொகுதிகளிலும் பெரும் பாலான கிறிஸ்துவ மக்கள் வசிக்கிறார்கள். ஆகஸ்ட் 29ம் தேதி நடைபெறும் கொடியேற்று நிகழ்ச்சி யில் பங்கேற்க ஒரு நாளைக்கு முன்ன தாக புறப்படுவார்கள். எனவே ஆகஸ்ட் 27ம் தேதி முதல் சிறப்பு ரயில் இயக்க வேண்டும். தொடர்ந்து திருவிழா நடை பெறும் 10 நாட்களு க்கு இயக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகத்திற்கு ஆர்.சச்சி தானந்தம் எம்.பி. தனது கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.