districts

img

ஆற்றைக் கடந்து சென்று இறந்தவர்களை அடக்கம் செய்யும் அவலம்

திண்டுக்கல், பிப்.1- திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஊராட்சி ஒன்றி யத்திற்குட்பட்ட ராஜக்காபட்டி ஊராட்சிக்குட்பட்டது தம்ப குளத்துப்பட்டி. இந்த ஊரில் 300 தலித் குடும்பங்கள் வசித்து வரு கின்றன. இந்த ஊரில் இறந்த வர்களை சந்தானவர்த்தினி ஆற் றைக் கடந்து சென்று தான் அடக் கம் செய்து வருகிறார்கள்.  பல சமயங்களில் ஆற்றில் தண்ணீர் வந்தால் நீந்திச்சென்று  உடலை அடக்கம் செய்ய வேண்டி யுள்ளது. சமீபத்தில் இந்த ஊரைச் சேர்ந்த கருப்பையா என்பவர் இறந்துவிட்டார். அவரது உடலை ஆற்றை கடந்து எடுத்துச் சென்று அடக்கம் செய்தனர்.  இந்த ஊர் மயானத்திற்கு செல்ல முறையான சாலை வசதி  இல்லை. மின் விளக்கு வசதி இல்லை. இதுகுறித்து அதிகாரி கள் கண்டுகொள்ளாத போக்கு உள்ளதாக கிராம மக்கள் வேத னையுடன் தெரிவித்தனர்.  இந்நிலையில் தலித் மக்களை சந்தித்து புதிய மயானம் இடம் ஒதுக்கித் தருவதாக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.