districts

img

ஸ்ரீராமபுரம் பகுதியில் மணல் கொள்ளை லாரியை சிறைப்பிடித்து சிபிஎம் போராட்டம்

சின்னாளபட்டி, மே 14- திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி ஸ்ரீ ராமபுரம் பகு தியில் மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது. அதி காரிகள் மணல் கொள்ளை யர்களுக்கு துணை போவ தாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ரெட்டியார்சத்திரம் ஒன்றியச் செயலாளர் கே.எஸ். சக்திவேல் குற்றம்சாட்டியுள் ளார். மேலும் அவர் கூறுகை யில், மணல் கொள்ளையை ஆளுங்கட்சியை சேர்ந்த வர்களும் எதிர்க்கட்சியை சேர்ந்தவர்களும் செய்கின்ற னர். அரசு அனுமதித்த கட்ட ணத்தை விட பல மடங்கு அதி கமாக வசூலிக்கிறார்கள். தெத்துப்பட்டியில் இருந்து மணல் அள்ளிக்கொண்டு குருவாதநாயக்கனூருக்கு செல்கிறார்கள். செல்லும் வழியில் எல்லாம் மணலைக் கொட்டிக் கொண்டே செல்கி றார்கள் .இதனால் இப்பகுதி யில் வாழும் கர்ப்பிணி பெண் கள், பள்ளிக் குழந்தைகள், முதியோர்கள் ஆகியோர் மிகவும் அவதிப்பட்டு மூச்சு திணறல் ஏற்படும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இது குறித்து மாவட்ட நிர்வாகத்தி டம் மனுக்கள் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. சம்பந்தப்பட்ட தனி யார் நிறுவன அதிகாரிகள் எங்களை சந்திக்க மறுத்து விட்டனர்.  இதனால் வெள்ளியன்று கருப்பி மடம் அருகே வந்த  டிப்பர் லாரிகளை சிறைப்  பிடித்தோம். லாரி ஓட்டுநர் களுக்கு ஓட்டுனர் உரிமம் இல்லை. சம்பந்தப்பட்ட பொறியாளர் பூமிபாலன் சம்பவ இடத்திற்கு வந்து ‘இன்று முதல் தூசிகள் ஏற்  படாதவாறு படுதா போட்டு  அனுப்புகிறோம். லாரிகளின் சைடில் மணல் கொட்டாத வாறு பார்த்துக் கொள்கிறோம் என்று எழுதிக் கொடுத்தப் பிறகே போராட்டத்தை கை விட்டோம் என்று தெரி வித்தார். இப்போராட்டத்தில் ஒன்றியக் குழு உறுப்பினர்  கள் சையது ஆதாம் சேட், சந்துரு , விவசாயத்தொழிலா ளர் சங்க நிர்வாகி முனி யாண்டி கிளைச் செயலாளர் கள் காளிதாஸ், ஞானவேல், சக்கரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.